ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் வருமா வராதா... என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் பாண்டியராஜன்

author img

By

Published : Nov 23, 2019, 10:24 PM IST

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தல் வருமா, வராதா என்ற கேள்விக்கே இடமில்லை, கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister pandiarajan

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்மொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், 2102ஆம் ஆண்டுக்கான பயனாளிகளுக்கு சுமார் 1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது. மிகச் சிறந்த முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

வருமா, வராதா என்ற கேள்விக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு 90 விழுக்காடு நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்
நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்

இதையும் படிங்க: ரூ.26 கோடி மதிப்பில் நீதிமன்ற இணைப்பு கட்டடம் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறப்பு
!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்மொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், 2102ஆம் ஆண்டுக்கான பயனாளிகளுக்கு சுமார் 1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது. மிகச் சிறந்த முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

வருமா, வராதா என்ற கேள்விக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு 90 விழுக்காடு நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்
நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர்

இதையும் படிங்க: ரூ.26 கோடி மதிப்பில் நீதிமன்ற இணைப்பு கட்டடம் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறப்பு
!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாபா பாண்டியராஜன் அவர்கள் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டிப்பாக மருத்துவக் கல்லூரி வந்து இருக்கிறது அதுவும் சீக்கிரமாக அது திறக்கப்படும் என்றும் தெரிவித்தார் அதுமட்டுமில்லாமல் உள்ளாட்சித் தேர்தல் வருமா வராதா என்ற கேள்விக்கே இடமில்லை கண்டிப்பாக வருமென்றும் பேட்டியளித்தார்


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளுக்கு 1கோடியே 52லட்சத்து 60 ஆயிரத்து800 ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் சார்ந்த 2102 பயனாளிகளுக்கு தமிழ்மொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது .

தமிழ்மொழி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன் பங்கேற்று ஸ்மார்ட் கார்ட் சான்றுகள் பட்டா பெயர் மாற்றம் பட்டா உட்பிரிவு நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி 4 குழுக்கள்.

கல்வி உதவித் தொகை இலவச வீட்டு மனை பட்டா இலவச தையல் எந்திரங்கள் அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 2102பயனாளிகளுக்கு சுமார் 1 கோடி 52 லட்சத்து 60 ஆயிரம்800 ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் பாண்டியராஜன் திருவள்ளூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மீனா ஆகியோருடன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எந்த மாநிலத்திலும் தரப்படாத நலத்திட்ட உதவிகள் நமது தமிழக முதல்வரால் அதுவும் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி வருகிறது என்றும் மிக சிறந்த முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் வருமா வராதா என்ற கேள்விக்கு இடமில்லை என்றும் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் வரும் என்றும் அதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நாங்கள் ஜெயிப்போம் என்றும் வருமா வராதா என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட களத்தில் இறங்கி செயல்படுவோம் என்றும் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.