ETV Bharat / state

+2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!

author img

By

Published : Nov 5, 2019, 8:18 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே பிளஸ் 2 வரை படித்து விட்டு மூன்று ஆண்டுகளாக மருத்துவராகப் பணிபுரிந்து வந்த, பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போலி மருத்துவர் கைது

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாகத் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனியார் கிளினிக், மருத்துவமனைகளில் திடீர் சோதனை செய்து போலி மருத்துவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், திருத்தணி அமிர்தாபுரம் - திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சோதனை செய்தபோது வேளாங்கண்ணி(43) என்பவர் மருத்துவம் படித்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு லேப் டெக்னீசியனாக சில காலங்கள் பணிபுரிந்தது தெரிய வந்தது. மேலும் அந்த அனுபவத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக திருத்தணி பகுதியில் தனியார் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது.

போலி மருத்துவர் கைது

அதன்பின், சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல் துறையினர் வேளாங்கண்ணியைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரி தயாளன் கூறுகையில்," இதே போன்று போலி மருத்துவர்களைக் கண்டறியும் பணி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் புதைப்பு! - தந்தையின் கொடூர செயல்

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாகத் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனியார் கிளினிக், மருத்துவமனைகளில் திடீர் சோதனை செய்து போலி மருத்துவர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், திருத்தணி அமிர்தாபுரம் - திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சோதனை செய்தபோது வேளாங்கண்ணி(43) என்பவர் மருத்துவம் படித்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு லேப் டெக்னீசியனாக சில காலங்கள் பணிபுரிந்தது தெரிய வந்தது. மேலும் அந்த அனுபவத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக திருத்தணி பகுதியில் தனியார் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது.

போலி மருத்துவர் கைது

அதன்பின், சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல் துறையினர் வேளாங்கண்ணியைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரி தயாளன் கூறுகையில்," இதே போன்று போலி மருத்துவர்களைக் கண்டறியும் பணி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் புதைப்பு! - தந்தையின் கொடூர செயல்

Intro:திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் பிளஸ் டூ வரை படித்துவிட்டு மூன்று ஆண்டு காலமாக மருத்துவம் பார்த்த அந்த வேளாங்கண்ணி வயது 43 என்ற போலி டாக்டர் கைது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் இருந்தது அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உள்ள தனியார் கிளினிக்கு மற்றும் மருத்துவமனைகளில் திடீர் சோதனை செய்து போலி டாக்டர்களை கைது செய்து வந்தனர்.இந்த நிலையில் என்று சுகாதாரத்துறை அதிகாரி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் அமிர்தபுரம் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சோதனை செய்தபோது அங்கு இருந்த வேளாங்கண்ணி வயது 43 என்பவர் மருத்துவம் படித்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லாமல் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் அவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு லேப் டெக்னீசியன் ஆக இருந்து அவர் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மேல் திருத்தணி பகுதியில் தனியார் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் திருத்தணி போலீசில் புகார் செய்தனர் போலீசார் போலி மருத்துவரான வேளாங்கண்ணி என்பவரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போன்று போலி மருத்துவர்கள் களை எடுக்கும் பணி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் தயாளன் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.