ETV Bharat / state

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான நபர் குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Mar 10, 2021, 12:26 PM IST

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திமுக பிரமுகர் கொலை
திமுக பிரமுகர் கொலை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை(42), திமுகவில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று தனது தோட்டத்திற்கு சென்றபோது செல்லத்துரையை அடையாள தெரியாத நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இந்தச் சம்பவம் அரியநாயகிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவில் முக்கியப் பதவியில் இருப்பதால் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் செல்லத்துரை உடலை நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில், முக்கூடல் காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இந்த வழக்கில் கைது செய்தனர்.

மேலும், விசாரணையில் குடும்ப முன்விரோதம் காரணமாக ஐயப்பன் செல்லத்துரையை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், ஐயப்பன் தொடர்ந்து இதுபோன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி முக்கூடல் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், தற்போது ஐயப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் செல்லத்துரை கொலை வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் கைது செய்வதற்கான ஆவணங்களை காவலர்கள் முறைப்படி சிறைத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனையும் படிங்க: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை(42), திமுகவில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று தனது தோட்டத்திற்கு சென்றபோது செல்லத்துரையை அடையாள தெரியாத நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இந்தச் சம்பவம் அரியநாயகிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவில் முக்கியப் பதவியில் இருப்பதால் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் செல்லத்துரை உடலை நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில், முக்கூடல் காவல்துறையினர் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இந்த வழக்கில் கைது செய்தனர்.

மேலும், விசாரணையில் குடும்ப முன்விரோதம் காரணமாக ஐயப்பன் செல்லத்துரையை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில், ஐயப்பன் தொடர்ந்து இதுபோன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி முக்கூடல் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், தற்போது ஐயப்பன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் செல்லத்துரை கொலை வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் கைது செய்வதற்கான ஆவணங்களை காவலர்கள் முறைப்படி சிறைத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனையும் படிங்க: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.