ETV Bharat / state

நிர்மலாதேவியின் உடல் நிலையில் முன்னேற்றம்! - நெல்லை

நெல்லை: கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து சென்ற வழக்கில் கைதான நிர்மலாதேவி மனநலம் பாதிக்கபட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை
author img

By

Published : Jul 26, 2019, 6:36 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்ல முயன்றதற்கான ஆடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா ஜாமீனில் விடுதலையாகிய சூழலில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது மனநிலை சரியில்லாதவர்போல் நடந்துகொண்டார். இதனைக் கருத்தில்கொண்டு, இவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநிலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை

அதன்படி, சிகிச்சை தொடங்கிய சில தினங்களில் அவர் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இதனையடுத்து சிகிச்சை மூலம் உடல்நலத்திலும், மனநலத்திலும் முன்னேற்றம் அடைந்த அவர் ஓய்வு எடுக்க தனிமையான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கவுன்சிலிங், யோகா, உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மேலும், சில தினங்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்ல முயன்றதற்கான ஆடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா ஜாமீனில் விடுதலையாகிய சூழலில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது மனநிலை சரியில்லாதவர்போல் நடந்துகொண்டார். இதனைக் கருத்தில்கொண்டு, இவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநிலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை

அதன்படி, சிகிச்சை தொடங்கிய சில தினங்களில் அவர் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இதனையடுத்து சிகிச்சை மூலம் உடல்நலத்திலும், மனநலத்திலும் முன்னேற்றம் அடைந்த அவர் ஓய்வு எடுக்க தனிமையான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கவுன்சிலிங், யோகா, உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மேலும், சில தினங்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Intro:நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நிலையில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான போது மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொண்டதைத் தொடர்ந்து அவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Body:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி . இவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான போது தான் தியானம் செய்வதாகவும் , தனக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும் கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போன்று நடந்து கொண்டார் . அதன் பின்னர் உறவினருடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தனக்கு கடும் மனபாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் , உடனடியாக நெல்லை அல்லது மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் பேசியிருந்தார். இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி நெல்லை உள்ள தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக உள்நோயாளிகாக அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஏற்கனவே மன அழுத்தம் , உள்ளிட்ட பாதிப்புகளால் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிருந்த அவருக்கு கடந்த 3 தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனிமையான இடத்தில் ஓய்வு எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கும் மனநிலை மருத்துவர்கள் கவுன்சிலிங், யோகா , உடற்பயிற்சி ஆகியவற்றுடன் இணைந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சில தினங்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று சொந்த ஊர் திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.