ETV Bharat / state

"திமுக தோண்டும் குழியில் அதிமுக விழக்கூடாது" - கிருஷ்ணசாமி - ADMK should not fall

திருநெல்வேலி: சமூகநீதி என்ற பெயரில் திமுக தோண்டும் குழியில் அதிமுக விழுந்து விடக்கூடாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணசாமி
author img

By

Published : Jul 23, 2019, 8:11 PM IST

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாஞ்சோலை நிலத்தை மாநில அரசு கைப்பற்றி, அங்கே பாடுபட்ட குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே சமூகநீதி.

கிருஷ்ணசாமி

திமுகவின் அரசியல் வரலாற்றில் மாஞ்சோலை படுகொலை ஒரு கரும்புள்ளி. திமுகவினர் சமூக நீதி குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது என்ற அவர், சமூகநீதி எனும் பெயரில் திமுக தோண்டும் குழியில் அதிமுக விழுந்து விடக்கூடாது என, வலியுறுத்தினார்.

மேலும், 10 சதவிகித இட ஒதுக்கீடு மறுப்பு உட்பட அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் கொள்கை என்றும், சமூகநீதி என்ற வார்த்தையை பயன்படுத்தி திமுகவினர், அதிமுகவை மிரட்டுவதாகவும் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாஞ்சோலை நிலத்தை மாநில அரசு கைப்பற்றி, அங்கே பாடுபட்ட குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதே சமூகநீதி.

கிருஷ்ணசாமி

திமுகவின் அரசியல் வரலாற்றில் மாஞ்சோலை படுகொலை ஒரு கரும்புள்ளி. திமுகவினர் சமூக நீதி குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது என்ற அவர், சமூகநீதி எனும் பெயரில் திமுக தோண்டும் குழியில் அதிமுக விழுந்து விடக்கூடாது என, வலியுறுத்தினார்.

மேலும், 10 சதவிகித இட ஒதுக்கீடு மறுப்பு உட்பட அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் கொள்கை என்றும், சமூகநீதி என்ற வார்த்தையை பயன்படுத்தி திமுகவினர், அதிமுகவை மிரட்டுவதாகவும் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.

Intro:அதிமுக சமூகநீதி என்ற பெயரில் திமுக தோண்டும் குழியில் விழுந்து விடக்கூடாது. 10 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு உட்பட அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் கொள்கை இதில் சமூகநீதி என்ற வார்த்தையை பயன் படுத்தி திமுகவினர் அதிமுகவை மிரட்டுகின்றனர் என நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.Body:



நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 20 வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசுகையில்,


தமிழகத்தில் உள்ள அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட போராட்டம் இந்த ஜூலை 23 போராட்டம். தமிழக அரசு தாமிரபரணி கரையில் இடம் ஒதுக்கினால் போது நாங்கள் மணிமண்டபம் கட்டிக்கொள்வோம்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாஞ்சோலை நிலைத்தை மாநில அரசு கைப்பற்றி அங்கே பாடுபட்ட குடும்பத்திற்கு பிரித்துக்கொடுக்க வேண்டும் அதுவே சமூகநீதி.

திமுகவின் அரசியல் வரலாற்றில் மாஞ்சோலை படுகொலை ஒரு கரும்புள்ளி அவர்கள் சமூக நீதி குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டம் நடத்த உள்ளோம். நடிகர் சூர்யா கூறியது மீது எனக்கு எந்த கருத்தும் இல்லை.

சமூக நீதி என்ற பெயரில் திமுகவின் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் நினைக்கிறார்கள். அதிமுக சமூகநீதி என்ற பெயரில் திமுக தோண்டும் குழியில் விழுந்து விடக்கூடாது என்று நான் எச்சரிக்கின்றேன். 10 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு உட்பட அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் கொள்கை இதில் சமூகநீதி என்ற வார்த்தையை பயன் படுத்தி திமுகவினர் அதிமுகவை மிரட்டுகின்றனர் என்றும் அவர் கூறினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.