ETV Bharat / state

மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு - 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

author img

By

Published : Oct 30, 2019, 6:51 PM IST

தேனி: மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியுள்ள நிலையில் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

dam

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணையில் தேங்குகிறது. 57 அடி நீர்மட்ட அளவுள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலையில் 55 அடியை எட்டியது.

மஞ்சளாறு நீர்மட்டம் உயர்வு

இதையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் 57 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. தற்போதுவரை பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்வரத்து 585 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுவதால் கெங்குவார்பட்டி, டி. கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட அணையின் கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விடிய விடிய மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணையில் தேங்குகிறது. 57 அடி நீர்மட்ட அளவுள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலையில் 55 அடியை எட்டியது.

மஞ்சளாறு நீர்மட்டம் உயர்வு

இதையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் 57 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. தற்போதுவரை பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்வரத்து 585 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுவதால் கெங்குவார்பட்டி, டி. கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட அணையின் கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விடிய விடிய மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Intro:         தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மஞ்சளாறு அணையின் நீர்வரத்து 585கன அடியாக அதிகரிப்பு. முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றம். தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் வசித்திட பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை.
Body:         தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. 57அடி நீர்த்தேக்க கொள்ளளவு உடைய மஞ்சளாறு அணை நேற்று மாலையில் 55 அடியை எட்டியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே வெள்யேற்றப்படுகின்றது.
இதனையடுத்து நேற்றிரவு முதல் விடிய, விடிய தற்போது வரை பெய்த தொடர் மழையால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
Conclusion: இதன் காரணமாக அணையின் நீர்வரத்து 585கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 435.32மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுவதால், கெங்குவார்பட்டி, டி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு, கண்ணாபட்டி உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையேர மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.