ETV Bharat / state

பெரியகுளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி, 10 பேர் படுகாயம்!

author img

By

Published : Sep 27, 2019, 11:57 AM IST

தேனி: பெரியகுளம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தோட்ட வேலைக்குச் சென்ற விவசாய கூலியாள்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

farmers vechile accident

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மஞ்சளாறு அணைப் பகுதியிலிருந்து கும்பக்கரை பகுதியிலுள்ள மாந்தோட்டத்தில் பணிக்காக உர மூட்டைகள், கூலியாள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த வேன் தர்மலிங்கபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Theni  Van Accident  Two people dead and 10 people injuired  farmers vechile accident  விவசாய கூலியாட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து  தேனி  2பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விபத்துக்குள்ளான வேன் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்

மேலும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அப்போது, ஐயர் (41) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஒன்பது பேர் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நான்கு பேர் மேல் சிகிச்ச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

காவல் துறையினர் இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தோட்ட வேலைக்குச் சென்ற விவசாய கூலியாள்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மஞ்சளாறு அணைப் பகுதியிலிருந்து கும்பக்கரை பகுதியிலுள்ள மாந்தோட்டத்தில் பணிக்காக உர மூட்டைகள், கூலியாள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது அந்த வேன் தர்மலிங்கபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Theni  Van Accident  Two people dead and 10 people injuired  farmers vechile accident  விவசாய கூலியாட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து  தேனி  2பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
விபத்துக்குள்ளான வேன் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்

மேலும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அப்போது, ஐயர் (41) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஒன்பது பேர் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நான்கு பேர் மேல் சிகிச்ச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

காவல் துறையினர் இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தோட்ட வேலைக்குச் சென்ற விவசாய கூலியாள்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro: பெரியகுளம் அருகே தோட்ட வேலைக்கு சென்ற விவசாய கூலியாட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து. 2பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை பகுதியிலிருந்து கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோட்டத்தில் வேலைக்காக உர மூடைகள் மற்றும் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் தர்மலிங்கபுரம் அருகே வந்த போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் முத்துப்பாண்டி(27) மற்றும் மணிகண்டன்(27 ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மீட்கப்பட்டு பெரியகுளம் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion: தோட்ட வேலைக்கு சென்ற விவசாய கூலியாட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.