ETV Bharat / state

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த குரல் கொடுப்பேன்-நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

தேனி: தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த குரல் கொடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

author img

By

Published : Mar 22, 2019, 9:39 PM IST

தேனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது இன்று மாட்டு வண்டியில் கரும்பு தட்டையுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரான பல்லவி பல்தேவிடம் தாக்கல் செய்தார்.

தேனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு குரல் கொடுப்பேன் என்றும், இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது இன்று மாட்டு வண்டியில் கரும்பு தட்டையுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரான பல்லவி பல்தேவிடம் தாக்கல் செய்தார்.

தேனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு குரல் கொடுப்பேன் என்றும், இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Intro:தேனியில் இரட்டை மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.


Body: பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் 18தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்பவர் அறிவிக்கப்பட்டடிருந்தார். நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை எனும் ஊரைச் சேர்ந்த இவரி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேனியில் இரட்டை மாட்டு வண்டியில் கரும்பு தட்டையுடன் ஊர்வலமாக சென்றார். தேனி பங்களாமேடு பகுதியில் இருந்து ஐடிஐ வரை மாட்டு வண்டியில் வந்து பின்னர் அங்கிருந்து நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு தேர்தல் அலுவலரான பல்லவி பல்தேவிடம் தனது வேட்பு மனுவை வழங்கி தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்துவதற்கு குரல் கொடுப்பேன், இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.


Conclusion: பேட்டி : சாகுல் அமீது (நாம் தமிழர் கட்சி வேட்பாளர், தேனி பாராளுமன்ற தொகுதி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.