ETV Bharat / state

தேனியில் பருவ மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Aug 8, 2019, 12:52 PM IST

தேனி: நீண்ட நாட்களுக்கு பிறகு தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருவதால் இடுக்கி, எர்ணாகுளம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது.

தமிழக – கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்துவருகிறது. கூடலூர், கம்பம், உத்தமபாளைம், சின்னமனூர், வீரபாண்டி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது.

தேனியில் சாரல்மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி!

போதிய மழையில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவுப்பணிகள் இனி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பருவ மழை பெய்ததால், தேனி மாவட்ட பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருவதால் இடுக்கி, எர்ணாகுளம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது.

தமிழக – கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்துவருகிறது. கூடலூர், கம்பம், உத்தமபாளைம், சின்னமனூர், வீரபாண்டி, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது.

தேனியில் சாரல்மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி!

போதிய மழையில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவுப்பணிகள் இனி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பருவ மழை பெய்ததால், தேனி மாவட்ட பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Intro: நீண்ட நாட்களுக்குப் பிறகு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பல மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
Body: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இடுக்கி, பத்தினம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கின்றன. தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஏலம், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்ற தேனி மாவட்டத் தொழிலாளர்களும் கடந்த சில தினங்களாக செல்லவில்லை.
இந்நிலையில் இந்த கனமழை காரணமாக தேனி மாவட்டத்திலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளைம், சின்னமனூர், வீரபாண்டி, போடி, தேனி, பெரியகுளம் என அனைத்து இடங்களிலும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது.
நீண்ட நாட்களாக போதிய மழை இல்லாமல் வறண்டிருந்த நிலங்கள், தற்போது குளிர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் முதல் போக சாகுபடிக்கு ஆர்வம் காட்டாத கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தற்போது உழவுப்பணிகளை துவங்குவார்;கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Conclusion: நீண்ட நாட்களாக பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த தேனி மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.