ETV Bharat / state

ஆள்மாறாட்ட விவகாரம்: கல்லூரி முதல்வரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

author img

By

Published : Sep 21, 2019, 9:20 PM IST

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு வரும் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா விவகாரம் தொடர்பாக இன்று காவல் துறையினர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சரிவர ஆவணங்களை பார்க்காமல் உதித்சூர்யா எவ்வாறு கல்லூரியில் சேர்க்கப்பட்டார், முறைகேடாக மாணவர் சேர்ந்தது குறித்தும், புகார் கிடைத்தும் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்காமல் தாமதத்திற்கான காரணம் என்ன? ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித்சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனுக்கும், முதல்வருக்குமான தொடர்பு என்ன? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

விசாரணைக்கு வரும் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்

கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய பின்பு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா விவகாரம் தொடர்பாக இன்று காவல் துறையினர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சரிவர ஆவணங்களை பார்க்காமல் உதித்சூர்யா எவ்வாறு கல்லூரியில் சேர்க்கப்பட்டார், முறைகேடாக மாணவர் சேர்ந்தது குறித்தும், புகார் கிடைத்தும் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்காமல் தாமதத்திற்கான காரணம் என்ன? ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித்சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனுக்கும், முதல்வருக்குமான தொடர்பு என்ன? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

விசாரணைக்கு வரும் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்

கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய பின்பு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro: Follow up...
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை.Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா விவகாரம் தொடர்பாக இன்று காவல் துறையினர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் தனிப்படை அதிகாரியான காவல் ஆய்வாளர் உஷாராணி மற்றும் க.விலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் கல்லூரி முதல்வரிடம் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் சரிவர ஆவணங்களை பார்க்காமல் உதித்சூர்யா எவ்வாறு கல்லூரியில் சேர்க்கப்பட்டார், முறைகேடாக மாணவர் சேர்ந்தது குறித்தும், புகார் கிடைத்தும் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளிக்காமல் தாமதத்திற்கான காரணம் மேலும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித் சூர்யா வின் தந்தை மருத்துவர் வெங்கடேசனுக்கும், முதல்வருக்குமான தொடர்பு என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமார உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய பின்பு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
.Conclusion: இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.