ETV Bharat / state

தம்பியை கொலை செய்து நாடகமாடிய அண்ணனுக்கு ஆயுள் தண்டனை! - Court orders life time sentence for man who killed his own brother

தேனி: பணப்பிரச்னையால் உடன் பிறந்த தம்பியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

murder
murder
author img

By

Published : Jan 21, 2020, 9:49 AM IST

தேனி சிவாஜி நகரைச் சேர்ந்த மாயாண்டி - ராஜாமணி தம்பதிக்கு பாண்டியராஜன், தனபாண்டியன், சுந்தரபாண்டியன் என மூன்று மகன்கள் இருந்தனர். இதனிடையே 2016ஆம் ஆண்டு சகோதரர்கள் பாண்டியராஜன், தனபாண்டியன் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிகேட்ட சுந்தரபாண்டியனை, அவரது சகோதரரான பாண்டியராஜன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில் சுந்தரபாண்டியன் இறந்துவிடவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி தேனி எரிவாயு தகனமேடையில் பாண்டியராஜன் எரிக்க முற்பட்டுள்ளார். மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தாய் ராஜமணி தேனி நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி மயானத்தில் இருந்த சுந்தரபாண்டியன் உடல் கைப்பற்றப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செயய்ப்பட்டது.

அப்போது பணத்தகராறில் தம்பியை கொலை செய்து பாண்டியராஜன் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாண்டியராஜன் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றவாளி பாண்டியராஜனை அழைத்துச் சென்ற காவல் துறையினர்

இதனிடையே இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி அப்துல்காதர், பாண்டியராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை செய்து தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளி பாண்டியராஜனை மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

தேனி சிவாஜி நகரைச் சேர்ந்த மாயாண்டி - ராஜாமணி தம்பதிக்கு பாண்டியராஜன், தனபாண்டியன், சுந்தரபாண்டியன் என மூன்று மகன்கள் இருந்தனர். இதனிடையே 2016ஆம் ஆண்டு சகோதரர்கள் பாண்டியராஜன், தனபாண்டியன் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிகேட்ட சுந்தரபாண்டியனை, அவரது சகோதரரான பாண்டியராஜன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில் சுந்தரபாண்டியன் இறந்துவிடவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி தேனி எரிவாயு தகனமேடையில் பாண்டியராஜன் எரிக்க முற்பட்டுள்ளார். மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தாய் ராஜமணி தேனி நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி மயானத்தில் இருந்த சுந்தரபாண்டியன் உடல் கைப்பற்றப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செயய்ப்பட்டது.

அப்போது பணத்தகராறில் தம்பியை கொலை செய்து பாண்டியராஜன் நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாண்டியராஜன் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றவாளி பாண்டியராஜனை அழைத்துச் சென்ற காவல் துறையினர்

இதனிடையே இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி அப்துல்காதர், பாண்டியராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை செய்து தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளி பாண்டியராஜனை மதுரை மத்திய சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

Intro:          தேனியில் பணப்பிரச்சனையால் உடன் பிறந்த தம்பியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
Body: தேனி சிவாஜி நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது மனைவி ராஜாமணி(52). இவருக்கு பாண்டியராஜன், தனபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய 3 மகன்கள். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு சகோதரர்கள் பாண்டியராஜன், தனபாண்டியன் ஆகியோருக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சுந்தரபாண்டியன் தட்டிகேட்கவே ஆத்;திரமடைந்த பாண்டியராஜன் அவரை அரிவாளால் தாக்கியதில் இறந்துவிடவே தூக்கி மாட்டி இறந்து விட்டதாக நாடகமாடி தேனி எரிவாயு தகனமேடையில் பாண்டியராஜன் எரிக்க முற்பட்டுள்ளார்.
         மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தாய் ராஜமணி தேனி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி மயானத்தில் இருந்த சுந்தரபாண்டியனின் பிரதேத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பணத்தகராறில் தம்பியை கொலை செய்து பாண்டியராஜன் நாடகமாடியது தெரியவரவே அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தினர்.
         இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல்; அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் அதை கட்டத்தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் கொலை செய்து தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் அதை செலுத்தத் தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவற்றில ஆயுள் மற்றும் கடுங்காவல் தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார்;.
         Conclusion: இதனையடுத்து குற்றவாளியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.