ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தேனி: ஆண்டிபட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

author img

By

Published : Nov 7, 2019, 10:58 PM IST

குற்றவாளி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(31). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கருப்புசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளியை அழைத்து வரும் காவல்துறையினர்

மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(31). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கருப்புசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளியை அழைத்து வரும் காவல்துறையினர்

மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

Intro: ஆண்டிபட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.7லட்சம் வழங்கிட தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Body:         தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்;கம்மாள்பட்டி காலணியை சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த இராஜதானி காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளி கருப்பசாமிக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத்தவறினால் மேலும் 2வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.7லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.


Conclusion: இதனைத் தொடர்ந்து குற்றவாளி கருப்பசாமியை தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.