ETV Bharat / state

10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயில்: மலர்த் தூவி வரவேற்ற எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத்!

author img

By

Published : Dec 16, 2020, 11:10 PM IST

தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் ஆண்டிபட்டி வரை பணிகள் நிறைவடைந்ததால், உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இன்று (டிச.16) சோதனை ஓட்டம் நடைபெற்றது. 10ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயிலை தேனி எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத் மலர்த் தூவி வரவேற்றார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயில்
10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயில்

தேனி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை நடந்த ரயில் சோதனை ஓட்டத்தில் கலந்துகொண்ட தேனி எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத் ரயிலை மலர்த் தூவி வரவேற்றார்.

மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் விளையக்கூடிய ஏலம், காபி, தேயிலை உள்ளிட்ட நறுமணப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் மதுரை - போடி ரயில் பாதை. தொடக்கத்தில் சரக்கு ரயிலாக இருந்த இவ்வழித்தடம், காலப்போக்கில் பயணிகள் போக்குவரத்திற்கு மீட்டர் கேஜ் ரயிலாக மாற்றப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதையாக தரம் உயர்த்துவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மதுரை - போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

10ஆண்டுகள் ரயில் சேவை நிறுத்தம்:

ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. இதனால், 10 ஆண்டுகள் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. தற்போது 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 கி.மீ., தூரமுடைய மதுரை - போடி அகல ரயில் பாதையில் முதற்கட்டமாக உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ., பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வரையில் பணிகள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கி.மீ., தூரத்திற்கு இன்று (டிச.16) சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியிலிருந்து விநாடிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணித்த ரயில் ஆண்டிபட்டி, கணவாய் பகுதிகளில் மட்டும் 80 முதல் 90 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.

ரயிலை வரவேற்ற தேனி மக்கள்:

இதில் தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிர்வு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டன. மத்திய ரயில்வே அமைச்சக தென் சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், கட்டுமானத் துறை தலைமை செயல் அலுவலர் ரவீந்திரபாபு, முதன்மைப் பொறியாளர் இளம்பூரணன் உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் பயணித்தனர்.

ரயிலை வரவேற்ற தேனி மக்கள்

10ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயிலை வரவேற்பதற்காக தேனி மாவட்ட மக்கள் ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் குவிந்தனர். உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்த ரயிலை தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் உள்பட பொதுமக்கள் பலரும் மலர்த் தூவி வரவேற்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத்:

இது குறித்து தேனி எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத் கூறுகையில், “மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்குமாறு விடுத்த எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய ரயில்வே அமைச்சர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், ரயில்வே அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்களை சந்தித்த எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத்

10ஆண்டுகளாக ரயில் சேவை இல்லாத மாவட்டமாக இருந்த தேனியில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் தேனி, போடி வரையில் நடைபெற்று வரும் பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாம்பன் பாலம் சென்சார் கோளாறு: காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம்

தேனி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை நடந்த ரயில் சோதனை ஓட்டத்தில் கலந்துகொண்ட தேனி எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத் ரயிலை மலர்த் தூவி வரவேற்றார்.

மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் விளையக்கூடிய ஏலம், காபி, தேயிலை உள்ளிட்ட நறுமணப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் மதுரை - போடி ரயில் பாதை. தொடக்கத்தில் சரக்கு ரயிலாக இருந்த இவ்வழித்தடம், காலப்போக்கில் பயணிகள் போக்குவரத்திற்கு மீட்டர் கேஜ் ரயிலாக மாற்றப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதையாக தரம் உயர்த்துவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மதுரை - போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

10ஆண்டுகள் ரயில் சேவை நிறுத்தம்:

ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. இதனால், 10 ஆண்டுகள் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. தற்போது 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 கி.மீ., தூரமுடைய மதுரை - போடி அகல ரயில் பாதையில் முதற்கட்டமாக உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ., பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வரையில் பணிகள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கி.மீ., தூரத்திற்கு இன்று (டிச.16) சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியிலிருந்து விநாடிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணித்த ரயில் ஆண்டிபட்டி, கணவாய் பகுதிகளில் மட்டும் 80 முதல் 90 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.

ரயிலை வரவேற்ற தேனி மக்கள்:

இதில் தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிர்வு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டன. மத்திய ரயில்வே அமைச்சக தென் சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், கட்டுமானத் துறை தலைமை செயல் அலுவலர் ரவீந்திரபாபு, முதன்மைப் பொறியாளர் இளம்பூரணன் உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் பயணித்தனர்.

ரயிலை வரவேற்ற தேனி மக்கள்

10ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயிலை வரவேற்பதற்காக தேனி மாவட்ட மக்கள் ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் குவிந்தனர். உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டிக்கு வந்த ரயிலை தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் உள்பட பொதுமக்கள் பலரும் மலர்த் தூவி வரவேற்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத்:

இது குறித்து தேனி எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத் கூறுகையில், “மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்குமாறு விடுத்த எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய ரயில்வே அமைச்சர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், ரயில்வே அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்களை சந்தித்த எம்.பி., ஓ.பி ரவீந்திரநாத்

10ஆண்டுகளாக ரயில் சேவை இல்லாத மாவட்டமாக இருந்த தேனியில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் தேனி, போடி வரையில் நடைபெற்று வரும் பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாம்பன் பாலம் சென்சார் கோளாறு: காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.