ETV Bharat / state

எங்களுக்கு அவரு தான் வேணும்! வருவாய் கோட்டாட்சியருக்காக உயர்ந்த கைகள்! - வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்

நீலகிரி: மக்களிடம் சிறப்பாகப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்ற கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் வாணியம்பாடி பகுதிக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் ஏராளமானோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

revenue officer transfer  village people protest in kudaloor  வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்  revenue officer transfer people protest
revenue officer transfer people protest
author img

By

Published : Dec 2, 2019, 9:58 PM IST

கூடலூர் வருவாய் கோட்டாட்சியராக 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி தீர்வு கண்டு வந்தார். குறிப்பாக, பழங்குடியின மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குளிருந்து பழங்குடியின மக்கள், பிற சமூக மக்கள் ஆகியோர் வெளியேற்றம் செய்யப்பட்டதில் நடந்த, பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான விசாரணையை நேர்மையாக மேற்கொண்டார். முதுமலையிலிருந்து வெளியேறிய பழங்குடியின மக்களுக்கு அரசின் புறம்போக்கு நிலம் ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

உள்ளாட்சி உங்களாட்சி 9 - ஊராட்சித் தலைவரின் பணிகள்

இந்த சூழலில், தீடீரென அவர் வாணியம்பாடி வருவாய் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பழங்குடியின மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்ததையடுத்து, கிராம மக்கள் ஒன்றுகூடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அவரது பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீண்டும் ஒரு வருட காலமாவது கூடலூரில் பணியாற்ற வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்

கூடலூர் வருவாய் கோட்டாட்சியராக 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி தீர்வு கண்டு வந்தார். குறிப்பாக, பழங்குடியின மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குளிருந்து பழங்குடியின மக்கள், பிற சமூக மக்கள் ஆகியோர் வெளியேற்றம் செய்யப்பட்டதில் நடந்த, பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான விசாரணையை நேர்மையாக மேற்கொண்டார். முதுமலையிலிருந்து வெளியேறிய பழங்குடியின மக்களுக்கு அரசின் புறம்போக்கு நிலம் ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

உள்ளாட்சி உங்களாட்சி 9 - ஊராட்சித் தலைவரின் பணிகள்

இந்த சூழலில், தீடீரென அவர் வாணியம்பாடி வருவாய் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பழங்குடியின மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்ததையடுத்து, கிராம மக்கள் ஒன்றுகூடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அவரது பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீண்டும் ஒரு வருட காலமாவது கூடலூரில் பணியாற்ற வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியருக்காக மக்கள் போராட்டம்
Intro:OotyBody:‌ உதகை 02-12-19

மக்களிடம் சிறப்பாக பணியாற்றி நன்மதிப்பைப் பெற்ற கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதிக்கு பணியிட மாறுதல் செய்யப் பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் ஏராளமானோர் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை.
--------
கூடலூர் வருவாய் கோட்டாட்சியராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி தீர்வு கண்டு வந்தார். குறிப்பாக பழங்குடியின மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்து பல ஆண்டுகளாக தீர்க்கபடாமல் இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வந்தார். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருந்து பழங்குடியின மக்கள் மற்றும் பிற மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான விசாரணையை நேர்மையாக மேற்கொண்டார். முதுமலையில் இருந்து வெளியேறிய பழங்குடியின மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலம் ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தடீரென அவர் வாணியம்பாடி வருவாய் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்க்கு பழங்குடியின மக்கள் இடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. ஏற்கனவே முதுமலை மற்றும் செம்பக்கொல்லி கிராமங்களை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவரது பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் ஏராளமான பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து, முற்றுகையிட்டனர். அதில் மீண்டும் ஒரு வருட காலமாவது கூடலூரில் பணியாற்ற வேண்டுமென கேட்டுகொண்டனர்.
இதுகுறித்து பேசிய பழங்குடியின மக்கள், முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தில் பழங்குடியின மக்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களது பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அதனை முறையாக விசாரணை செய்த வருவாய் கோட்டாட்சியர், குற்றவாளிகளை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது இவரது பணியிட மாற்றம் காரணமாக குற்றவாளிகள் தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது. அதேபோல முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தில் 3 கட்டம் துவங்கியுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் ஏமாறாத வகையில் பணிகளை நேர்மையாக மேற்கொண்டார். அதனை பாதியில் விட்டு செல்வதால் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவரது இடமாற்றத்தை ரத்து செய்து கூடலூரில் பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.