ETV Bharat / state

தஞ்சையில் அதிக வட்டி, இலவச தங்க நாணயம் தருவதாகப் பணம் மோசடி

author img

By

Published : Aug 2, 2021, 10:13 PM IST

முதலீடு செய்தால் அதிக வட்டி, தங்க நாணயம் இலவசம் போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி, பணத்தை ஏமாற்றிய நபர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டோருக்குப் பணத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம் மோசடி
பணம் மோசடி

தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர். கனேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுவர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு சிங்கப்பூரில் தங்க சுரங்கம், ஹெலிகாப்டர், மிகப்பெரிய பால்பண்ணை உள்ளிட்டவை இருப்பதாக பொதுமக்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிக வட்டி, தங்க நாணயம் இலவசம்

தொடர்ந்து தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதுடன், தங்க நாணயமும் இலவசமாக வழங்கப்படும் என பொதுமக்களிடத்தில் ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். இவர்களுக்கு இடைத்தரகராக வெங்கடேச சாஸ்திரிகள் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.

பணத்தை மீட்டுத்தரக் கோரும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான காணொலி

இதனை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடாகப் பெறப்பட்ட பல கோடி ரூபாயுடன் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலைமறைவு நபர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து இழந்த பணத்தை மீட்டுத்தரவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இன்று (ஆக.2) மனு அளித்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் 30 சவரன் நகை, ரூ. 70 ஆயிரம் கொள்ளை

தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர். கனேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுவர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு சிங்கப்பூரில் தங்க சுரங்கம், ஹெலிகாப்டர், மிகப்பெரிய பால்பண்ணை உள்ளிட்டவை இருப்பதாக பொதுமக்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிக வட்டி, தங்க நாணயம் இலவசம்

தொடர்ந்து தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதுடன், தங்க நாணயமும் இலவசமாக வழங்கப்படும் என பொதுமக்களிடத்தில் ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். இவர்களுக்கு இடைத்தரகராக வெங்கடேச சாஸ்திரிகள் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.

பணத்தை மீட்டுத்தரக் கோரும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான காணொலி

இதனை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடாகப் பெறப்பட்ட பல கோடி ரூபாயுடன் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலைமறைவு நபர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து இழந்த பணத்தை மீட்டுத்தரவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இன்று (ஆக.2) மனு அளித்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் 30 சவரன் நகை, ரூ. 70 ஆயிரம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.