ETV Bharat / state

ஊழல் புகாரை விட தீர்ப்பு தான் முக்கியம் - வைத்திலிங்கம்

author img

By

Published : Dec 23, 2020, 11:27 PM IST

தஞ்சாவூர்: யார் மீது வேண்டுமென்றாலும் ஊழல் புகார் தெரிவிக்கலாம், இறுதியில் தீர்ப்பு வரும்போது தான் உண்மை தெரியும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

amma clinic
amma clinic

தஞ்சாவூர் மாவட்டத்தில் 63 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கும் நிகழ்வு தஞ்சையை அடுத்த ராவுசாபட்டியில் நடைபெற்றது. இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாநிலங்களைவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மீது ஆளுநரிடம் புகார் அளித்தார். சர்க்காரியா கமிஷன் விசாரித்தது. தற்போது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் யார், மீதும் ஊழல் புகார் அளிக்கலாம், இறுதியில் தீர்ப்பு வரும் போது தான் உண்மை தெரியும்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சிகள் எந்த கருத்து வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம். அதிமுகவை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர்" என்றார்.

இதையும் படிங்க: 26 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 63 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கும் நிகழ்வு தஞ்சையை அடுத்த ராவுசாபட்டியில் நடைபெற்றது. இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாநிலங்களைவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மீது ஆளுநரிடம் புகார் அளித்தார். சர்க்காரியா கமிஷன் விசாரித்தது. தற்போது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் யார், மீதும் ஊழல் புகார் அளிக்கலாம், இறுதியில் தீர்ப்பு வரும் போது தான் உண்மை தெரியும்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சிகள் எந்த கருத்து வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம். அதிமுகவை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர்" என்றார்.

இதையும் படிங்க: 26 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.