ETV Bharat / state

கீழடி அகழாய்வு: பண்டைய ஓடுகள், பானை கண்டெடுப்பு

author img

By

Published : Jun 19, 2019, 11:24 PM IST

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில் ஏராளமான பண்டைய ஓடுகள், பானை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Keezhadi

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வு பணிகள் செய்யப்பட்டது. இதில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் என பல பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி

இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதி தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடக்கி வைத்தார். இந்த பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் தொடங்கப்பட்டு ஒருவார காலமே ஆன நிலையில் அங்குள்ள நான்கு அகழாய்வு குழிகளில் ஆய்வுப்பணியின்போது ஏராளமான பண்டைய கால ஓடுகளும், பானைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வு பணிகள் செய்யப்பட்டது. இதில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் என பல பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி

இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதி தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடக்கி வைத்தார். இந்த பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் தொடங்கப்பட்டு ஒருவார காலமே ஆன நிலையில் அங்குள்ள நான்கு அகழாய்வு குழிகளில் ஆய்வுப்பணியின்போது ஏராளமான பண்டைய கால ஓடுகளும், பானைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிவகங்க
ஜூன்.19

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணியில் ஏராளமான பண்டைய ஓடுகள் மற்றும் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் மூன்றுகட்ட அகழாய்வு பணிகள் செய்யப்பட்டு சுமார் 7000-க்கும் மேற்பட்ட பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் விதமாக மணிகள், தந்தத்திலான பொருட்கள், பண்டைய தமிழர்களின் கட்டிட அமைப்புகள் கிடைக்கப்பெற்றன.

இதனை தொடர்ந்து தமிழக அரசானது கடந்த ஆண்டு தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ம் கட்ட அகழாய்வு பணியை மேற்கொண்டது. இதில் தங்கத்திலான அணிகலன்கள், பவள மணிகள் என சுமார் 7000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றன. 

இதனை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை துவக்கிவைத்தார். பணிகள் துவங்கப்பட்டு ஒருவார காலம் ஆனநிலையில் நான்கு அகழாய்வு குழிகளில் ஆய்வுப்பணியின்போது ஏராளமான பண்டைய கால ஓடுகளும் பானையும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த பணிகள் தொல்லியல்துறை சார்பில் தமிழக தொல்லியல்துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.