ETV Bharat / state

ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் விவகாரம்: என்ன சொல்கிறார் எஸ்.பி? - ரவுடி கதிர்வேல்

சேலம்: ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை முடிந்த பிறகு உண்மைகள் வெளிவரும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தெரிவித்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர்
author img

By

Published : May 2, 2019, 7:41 PM IST

சேலத்தில் வசித்து வரும் ரவுடி கதிர்வேல் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டம் காரிப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

ரவுடி கதிர்வேலை உள்நோக்கத்தோடு காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர் என்றும் உண்மை தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர், என்கவுண்டர் சம்பவத்தின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவல் துறையினரை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் , "என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை தொடங்கி உள்ளது. விசாரணைக்குப் பிறகு முழு உண்மைகள் வெளிவரும்", என்றார்.

மேலும், ரவுடி கதிர்வேலின் என்கவுண்டர் சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர்

சேலத்தில் வசித்து வரும் ரவுடி கதிர்வேல் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டம் காரிப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

ரவுடி கதிர்வேலை உள்நோக்கத்தோடு காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர் என்றும் உண்மை தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர், என்கவுண்டர் சம்பவத்தின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவல் துறையினரை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் , "என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை தொடங்கி உள்ளது. விசாரணைக்குப் பிறகு முழு உண்மைகள் வெளிவரும்", என்றார்.

மேலும், ரவுடி கதிர்வேலின் என்கவுண்டர் சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர்
Intro:சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் விசாரணைக்குப் பிறகு முழு உண்மைகள் வெளிவரும் என்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தெரிவித்துள்ளார்.




Body:பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி ஆகிய குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரவுடி கதிர்வேல் சேலம் மாவட்டம் காரிப்பட்டி பகுதியில் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது. அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சேலம் அரசு பொது மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

ரவுடி கதிர்வேல் என்கவுண்டர் செய்யும் அளவுக்கு பெரிய குற்ற வழக்குகள் அவர் மீது இல்லை என்றும் காவல்துறையினர் உள்நோக்கத்தோடு கதிர் வேலை என்கவுண்ட்டர் செய்துள்ளனர் என்றும் கூறிய உறவினர்கள் உரிய உண்மை தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மருத்துவமனை வளாகத்திலேயே குவிந்துள்ளனர்.

இதனையடுத்து சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர், என்கவுண்டர் சம்பவத்தின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் போலீசாரை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் , என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை தொடங்கி இருக்கிறது . கதிர்வேல் மீது சேலம் நகரத்திற்கு உள்ளேயும் மாவட்ட அளவிலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு காவல்துறையின் முழுமையாக விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச் செயல்கள் குறித்து விளக்கமாக அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.


Conclusion:ரவுடி கதிர்வேல் என்கவுன்டர் சம்பவம் சேலத்தில் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.