ETV Bharat / state

மணல் விற்பனை தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கோரிக்கை! - மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சேலம்: மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளையும் விரைந்து முடித்து வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Salem sand lorry owners demand TN govt
author img

By

Published : Sep 1, 2019, 12:29 PM IST

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம். கண்ணையன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழ்நாட்டில் 30 லட்சத்திற்கும் மேல் கட்டுமான தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மணல் விற்பனை நடைமுறையில் உள்ளதாலும், காவிரி ஆற்று பகுதிகளில் மணல் எடுக்க தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கண்ணையன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளையும் விரைந்து முடித்து, மணல் குவாரிகளில் இருந்து தரமான மணல் எடுத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம். கண்ணையன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழ்நாட்டில் 30 லட்சத்திற்கும் மேல் கட்டுமான தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மணல் விற்பனை நடைமுறையில் உள்ளதாலும், காவிரி ஆற்று பகுதிகளில் மணல் எடுக்க தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கண்ணையன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொதுநல வழக்குகளையும் விரைந்து முடித்து, மணல் குவாரிகளில் இருந்து தரமான மணல் எடுத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Intro:மணல் விற்பனை தொடர்பான அனைத்து பொதுநல வழக்கு களையும் விரைந்து முடித்து வைத்து, மணல் குவாரிகளில் இருந்து தரமான மணல் எடுத்து விற்பனை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Body:சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ் .பி. செல்வராஜ் மாவட்ட செயலாளர், எம். கண்ணையன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .

அவர் கூறுகையில்," தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் மேல் கட்டுமான தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மணல் குவாரிகள் மற்றும் மணல் லாரிகளில் வேலை செய்வோர் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மணல் விற்பனை நடைமுறையில் உள்ளதாலும் காவிரி ஆற்று பகுதிகளில் மணல் எடுக்க தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

வீடுகள் கட்டுவோர் கட்டடங்கள் கட்டுவோர் மணல் சரிவர கிடைக்காமல் பெரும் சிக்கலில் உள்ளனர். இதனை அறிந்து எம்சாண்ட் விற்பனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

தற்போது மாநிலம் முழுவதும் எம்சாண்ட் விற்பனை அதிகரித்து உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

அதேநேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தரமில்லாத எம்சாண்ட் விற்பனை தமிழகத்தில் செய்யப்படுகிறது . இதனை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

தரமான எம்சாண்ட் விற்பனை தொடர்ந்து நடைபெற அரசு மணல் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். மேலும் மணல் கடத்தல் , ஆறுகளில் மணல் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சவுடு மணல் விற்பனையாளர்கள் உள்ளிட்ட சில சுயநலவாதிகள் அதிக அளவு பொதுநல வழக்குகளைத் தொடுத்து உள்ளனர்.

எனவே தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது இந்த பொது நல வழக்குகளை ஆராய்ந்து உடனடியாக முடித்து வைத்து தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


Conclusion:மேலும் அவர் கூறுகையில் தரமில்லாத எம்சாண்ட் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். தரமில்லாத எம்சாண்ட் மணலை கொண்டு செல்லும் லாரிகளை பிடித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.