ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

author img

By

Published : Sep 17, 2019, 5:06 PM IST

சேலம்: கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

older-man-arrested-for-selling-cannabis-near-attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம், தென்னங்குடி பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா விற்ற முதியவர் கைது

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர காவல் துறையினர் செல்லியம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்லியம்பாளையம் சுடுகாடு அருகே முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க... https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/south-railway-general-manager-rahul-jain-byte/tamil-nadu20190917165724465

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம், தென்னங்குடி பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா விற்ற முதியவர் கைது

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர காவல் துறையினர் செல்லியம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்லியம்பாளையம் சுடுகாடு அருகே முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க... https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/south-railway-general-manager-rahul-jain-byte/tamil-nadu20190917165724465

Intro:ஆத்தூர் அருகே பட்டப்பகலில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த முதியவரை , போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Body:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம், தென்னங்குடி பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக விலைக்கு ஏற்றபடி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கஞ்சா பொட்டலங்கள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் செல்லியம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செல்லியம்பாளையம் சுடுகாட்டில் முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பன்ன செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Conclusion:
பட்டப்பகலில் கஞ்சா விற்ற முதியவரை கைது செய்த இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.