ETV Bharat / state

இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று டன் கடல் அட்டைகள் பறிமுதல்

author img

By

Published : Oct 13, 2019, 8:38 PM IST

ரமாநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற மூன்று டன் கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

Sea Card

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவது வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. புகாரின் பேரில் வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனத்துறை அலுவலர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றகொண்டிருந்த நாட்டுப்படகை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

Sea card Smuggling In  Rameshwaram To Srilanaka
வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கடல் அட்டைகள்

அதில் 261 மூட்டைகளில் 3,200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகள் பறிமுதல் செய்த வனத்துறை அலுவர்கள், கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(31), கருப்பையா (45) என்பது தெரியவந்தது.

3 டன் கடல் அட்டை பறிமுதல்

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கடத்தலின் போது பிடிப்பட்ட கடல் அட்டைகளை ஒப்பிடுகையில் இதுதான் அதிக எடை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவது வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. புகாரின் பேரில் வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனத்துறை அலுவலர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றகொண்டிருந்த நாட்டுப்படகை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

Sea card Smuggling In  Rameshwaram To Srilanaka
வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கடல் அட்டைகள்

அதில் 261 மூட்டைகளில் 3,200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகள் பறிமுதல் செய்த வனத்துறை அலுவர்கள், கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(31), கருப்பையா (45) என்பது தெரியவந்தது.

3 டன் கடல் அட்டை பறிமுதல்

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கடத்தலின் போது பிடிப்பட்ட கடல் அட்டைகளை ஒப்பிடுகையில் இதுதான் அதிக எடை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

Intro:இராமநாதபுரம்
அக்.13
இலங்கைக்குக் கடத்த முயன்று 3 டன் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல், இருவர் கைது.


Body:இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை வனசரகர் வெங்கடேஷ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை 4 முதல் இராமேஸ்வரம் , மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள கடலில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகை கண்டனர். அதில் இருந்த இருவரும் அதிகாரிகளை பார்த்தவுடன் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர். அவர்களை வன அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின் படகை சோதனை செய்ததில் 261 மூடைகளில் 3200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

நாட்டுப் படகை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து மண்டபம் வன அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வேதாளையைச் சேர்ந்த சாகுல் ஹமீது(31), கருப்பையா (45) என்பது தெரியவந்தது. வனத்துறையினர் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் கடத்தலின் போது பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை ஒப்பிடுகையில் இதுதான் அதிக எடை என்பது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.