ETV Bharat / state

கருப்பு பட்டையுடன் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்திய மக்கள்!

author img

By

Published : Aug 16, 2019, 4:56 AM IST

Updated : Aug 17, 2019, 7:44 AM IST

இராமநாதபுரம்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உப்பூர் அனல் மின்நிலையத்தின் பாலப் பணி நிறுத்தக் கோரி கருப்பு பட்டையடித்து ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்குட்பட்ட உப்பூரில் சுமார் 12 ஆயிரத்து 655 கோடி செலவில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத் திறனுடனான 800 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின்நிலையங்கள் 1600 மெகாவாட் உற்பத்தியில் அமையவுள்ளது. இதற்காக சுமார் 912 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

uppur thermal plant  protest  bridge construction protest  fisherman protest  bridge on sea protest
அனல் மின்நிலையத்தின் பாலப் பணி நிறுத்தக்கோரிபோராட்டம்

இதுகுறித்து எந்த ஒரு முன்னறிவிப்பும் தங்களுக்கு தரவில்லை என்றும் , தற்பொழுது கடலினுள் 7.6 கிலோமீட்டருக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், கடலில் பாலம் அமைத்த கழிவுநீரை கடலினுள் விடும்பொழுது கடலின் வளம் அழியும், தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும் என்றுக்கூறி இதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கருப்பு பட்டையுடன் ஊராட்சி கிராம சபை கூட்டம்

இப்போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் கேசவன் தாஸ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசியில் பேசிய கிராம மக்கள், இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் வரை உப்பூர் அனல் மின் நிலையத்தில் கடலினுள் பாலம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி பிறகு முடிவு சொல்வதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்குட்பட்ட உப்பூரில் சுமார் 12 ஆயிரத்து 655 கோடி செலவில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத் திறனுடனான 800 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின்நிலையங்கள் 1600 மெகாவாட் உற்பத்தியில் அமையவுள்ளது. இதற்காக சுமார் 912 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

uppur thermal plant  protest  bridge construction protest  fisherman protest  bridge on sea protest
அனல் மின்நிலையத்தின் பாலப் பணி நிறுத்தக்கோரிபோராட்டம்

இதுகுறித்து எந்த ஒரு முன்னறிவிப்பும் தங்களுக்கு தரவில்லை என்றும் , தற்பொழுது கடலினுள் 7.6 கிலோமீட்டருக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், கடலில் பாலம் அமைத்த கழிவுநீரை கடலினுள் விடும்பொழுது கடலின் வளம் அழியும், தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும் என்றுக்கூறி இதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கருப்பு பட்டையுடன் ஊராட்சி கிராம சபை கூட்டம்

இப்போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் கேசவன் தாஸ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசியில் பேசிய கிராம மக்கள், இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் வரை உப்பூர் அனல் மின் நிலையத்தில் கடலினுள் பாலம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி பிறகு முடிவு சொல்வதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.15

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உப்பூர் அனல் மின்நிலையத்தின் பாலப் பணி நிறுத்தக்கோரி கருப்பு பட்டை அணிந்து ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்திய மோர் பண்ணை கிராம மக்கள்.


Body:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை உட்பட்ட உப்பூரில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத் திறன் கொண்ட 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் 1600 மெகாவாட் உற்பத்தியில் அமைய உள்ளது.இது 912 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி இதற்கான பணிகள் சுமார் ஆயிரத்து 12655 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

தற்பொழுது கடலினுள்7.6 கீலோ மீட்டருக்கு மண்ணை கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மோர் பண்ணை கிராமம் மக்கள் பாலம் அமைப்பது குறித்து எந்த ஒரு முன்னறிவிப்பு தரவில்லை என்றும் இப்படியாக கடலில் பாலம் அமைத்து நீரை பயன்படுத்திய கழிவுநீரை கடலினுள் விடும்பொழுது கடலின் வளம் அழியும், தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும், இந்த மீனை வாங்க மறுத்து விடுவார்கள் என்றும் கூறி இன்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுத்து இருந்தனர்.
மோர் பண்ணை கிராம மக்களின் போராட்டம் குறித்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் கேசவன் தாஸ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசியில் பேசிய கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தும் இடைப்பட்ட காலத்தில் உப்பூர் அனல் மின் நிலையத்தில் கடலினுள் பாலம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆட்சியர் இதுகுறித்து உரிய பேச்சு வார்த்தை நடத்தி பிறகு முடிவு சொல்வதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெறாமல் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிராம மக்களிடம் கேட்கும்பொழுது கடலை நம்பி தொழில் செய்யும் எங்களின் வாழ்க்கை இந்த கடலயே நம்பி உள்ளது. சிறு மீன்களை பிடித்து வியாபாரம் செய்யும் சாமானிய மீனவர்கள் என்றும், இப்படியாக கடலினுள் பாலம் அமைக்கும் பொழுது ஒரு குறுகிய கடல் பரப்பில் அதிக மீன்கள் கிடைப்பது மிகவும் சிரமமான காரியம் என்றும் பாலம் அமைக்கும் பணியை மாற்றி அமைக்கவோ அல்லது எங்கள் கப்பல் செல்லும் விதமாக அமைக்க வழி ஏதும் இருக்கும் பட்சத்தில் அவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுகின்றனர்.

சுதந்திர தினமான இன்று கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி, கடலில் கருப்புக்கொடி மேலும் படகுகளிலும் கருப்புக் கொடியை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர் மோர் பண்ணை கிராம மக்கள்.

பேட்டி: கிருஷ்ணம்மாள்
பேட்டி2:
கோவிந்தன்
மோர் பண்ணை கிராமத் தலைவர்.



Conclusion:
Last Updated : Aug 17, 2019, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.