ETV Bharat / state

என் வேலையை செய்யவிடுங்க காவல் துறையிடம் காட்டமான மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரம் : மனு கொடுக்கும் இடத்தில் உள்ள கூட்ட நெரிசலை சரிசெய்த மாவட்ட ஆட்சியர், காவலரை அழைத்து உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்காதீங்க, என் வேலையை செய்யவிடுங்கள் என்று காட்டமாக கூறினார்.

author img

By

Published : Sep 9, 2019, 7:55 PM IST

காட்டமான கலெக்டெர்


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம் குறைகளை கூற வளாகத்தில் மக்கள் குவிந்தனர்.

காவல்துறையை கண்டித்த மாவட்ட ஆட்சியர்.

பின்பு, மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுவை அளிக்க மக்கள் முந்தியடித்துக் கொண்டு ஆட்சியரை நோக்கி நகர்ந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை கவனித்த ஆட்சியர் வீரராகவ ராவ் இருக்கையிலிருந்து கீழ் இறங்கிச் சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியை செய்தார்.

பின்பு, அங்கிருந்து பெண் தலைமை காவலரை அழைத்து, உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்காதீங்க; என் வேலையை என்னை செய்யவிடுங்கள் என்று காட்டமாக கூறினார்.

மேலும், மனு அளிக்க வந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலர் முத்துமாரியும் தனித்தனியாக மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம் குறைகளை கூற வளாகத்தில் மக்கள் குவிந்தனர்.

காவல்துறையை கண்டித்த மாவட்ட ஆட்சியர்.

பின்பு, மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுவை அளிக்க மக்கள் முந்தியடித்துக் கொண்டு ஆட்சியரை நோக்கி நகர்ந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை கவனித்த ஆட்சியர் வீரராகவ ராவ் இருக்கையிலிருந்து கீழ் இறங்கிச் சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியை செய்தார்.

பின்பு, அங்கிருந்து பெண் தலைமை காவலரை அழைத்து, உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்காதீங்க; என் வேலையை என்னை செய்யவிடுங்கள் என்று காட்டமாக கூறினார்.

மேலும், மனு அளிக்க வந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலர் முத்துமாரியும் தனித்தனியாக மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.12

உங்கள் வேலையையும் நான் செய்யும்படி வைக்க வேண்டாம் காவல்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் காட்டம்.


Body:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்ற வாரம் விநாயகர் சதுர்த்தி விழா இருந்ததால் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் குறைகளை கூற ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குவிந்தனர்.

இம்மானுவேல் சேகரன் குரு பூஜை செப்.11 தேதி நடைபெற உள்ளதால் காவல்துறையினரின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தது,
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஒரு தலைமை காவல்
மற்றும் இரண்டு காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுவை அளிக்க மக்கள் முந்தியடித்துக் கொண்டு ஆட்சியரை நோக்கி நகர்ந்தனர்.இதனால் கூட்ட நெரிசலில் ஏற்பட்டது இதைப் கவனித்த ஆட்சியர் வீர ராகவ ராவ் இருக்கையிலிருந்து கீழ் இறங்கிச் சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியை செய்தார். பின் அங்கிருந்து பெண் தலைமை காவலரை அழைத்து
" உங்கள் வேலையையும் சேர்த்து நான் செய்யும்படி வைக்க வேண்டாம், என் வேலையை என்னைச் செய்ய விடுங்கள்" என்று காட்டமாக கூறினார்.
மேலும் கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்தி மனு அளிக்க அனுப்புமாறு கூறினார்.

மனு அளிக்க வந்த மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலர் முத்துமாரியும் தனித்தனியாக மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை
பெற்றனர்.


இந்த நிகழ்வு குறைதீர் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.