ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்!

புதுக்கோட்டை: இலுப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Aug 31, 2019, 9:52 AM IST

பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகையில், பொக்லைன் இயந்திரம் முலம் லாரிகளில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக இலுப்பூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் ஆய்வாளர் ஜெயராமன், சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல் துரையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செயப்பட்ட மணல் கடத்திய வாகனம், பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் ,
பறிமுதல் செயப்பட்ட மணல் கடத்திய வாகனம்

இதையறிந்த மணல் கொள்ளையர்கள் லாரி, பொக்லைன் இயந்திரங்களை எடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனங்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது, மலைக்குடிப்பட்டி என்னும் இடத்தில் பொக்லைன் இயந்திரத்தை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். ஆனால் அதிவேகமாக சென்ற லாரி அங்கிருந்து தப்பி சென்றது.

பின்னர், கல்குத்தாம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்பரேட்டர் கார்த்தி (23), வாகன உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகையில், பொக்லைன் இயந்திரம் முலம் லாரிகளில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக இலுப்பூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் ஆய்வாளர் ஜெயராமன், சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல் துரையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செயப்பட்ட மணல் கடத்திய வாகனம், பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் ,
பறிமுதல் செயப்பட்ட மணல் கடத்திய வாகனம்

இதையறிந்த மணல் கொள்ளையர்கள் லாரி, பொக்லைன் இயந்திரங்களை எடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனங்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது, மலைக்குடிப்பட்டி என்னும் இடத்தில் பொக்லைன் இயந்திரத்தை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். ஆனால் அதிவேகமாக சென்ற லாரி அங்கிருந்து தப்பி சென்றது.

பின்னர், கல்குத்தாம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்பரேட்டர் கார்த்தி (23), வாகன உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body: சினிமா பாணியில்
உயிரை பணயம் வைத்து மணல் கடத்தல் வாகனங்களை துரத்தி பிடித்த போலீசார். பொக்லின் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். லாரி தப்பியது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களை சினிமா பாணியில் இலுப்பூர் போலீசார் துரத்தி பிடித்து பறிமுதல் செய்தனர். அதிவேகமாக சென்ற லாரி அங்கிருந்து தப்பி சென்றது.

இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றுபடுகையில் பொக்லின் இயந்திரம் முலம் லாரிகளில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் தீவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்

அப்போது போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை அறிந்து கொண்ட மணல் கொள்ளையர்கள் லாரி, மற்றும் பொக்லின் இயந்திரங்களை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் வாகனங்களை சினிமா பாணியில் பின் தொடர்ந்து துரத்தி சென்றுள்ளார்.

அப்பொழுது மலைக்குடிப்பட்டி என்னும் இடத்தில் பொக்லைன் இயந்திரத்தை போலீசார் மடக்கி பிடித்தார்.
ஆனால் அதிவேகமாக சென்ற லாரி அங்கிருந்து தப்பி சென்றது.
பின்பு பொக்லின் ஆப்பரேட்டர் கல்குத்தாம்பட்டியை சேர்ந்த கார்த்தி (வயது-23) மற்றும் வாகன உரிமையாளர் விட்டாம்பட்டியை சேர்ந்த ரமேஸ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆப்ரேட்டர் கார்தியை கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.