தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 1477 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை காவலர் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
![மூடப்பட்ட காவல் நிலையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-corona-police-van-script-vis-7205953_20042020081003_2004f_1587350403_477.jpg)
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி.களத்தூர் காவல் நிலையத்தில், காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி, அங்கு பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.