பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவ துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் நில வேம்பு பொடியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை, தேர்தல் பிரிவு, சுரங்கத் துறை, மகளிர் திட்டம், சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு நில வேம்பு பொடி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு