ETV Bharat / state

வாய்ப்பு கொடுங்கள், மாற்றத்தை தருகிறோம்! பார்வையற்ற பெண் பரப்புரை - blind lady campaign for local body election

ராசாம்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் பார்வையற்ற பெண் போட்டியிடுகிறார். அவர் குறித்த செய்தித் தொகுப்பு...

rasampalayam campaign by blind lady
rasampalayam campaign by blind lady
author img

By

Published : Dec 25, 2019, 11:55 PM IST

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவியானது பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வேட்பாளராக உள்ளார் அதே ஊராட்சியில் வசிக்கும் சரண்யா.

இவர் எல்லப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.

பார்வை திறன் இல்லாதவராண சரண்யா, தனது குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பிரச்சாரம்

இளங்கலை பட்டப்படிப்பு பயின்றுவரும் இவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவரின் சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவரும் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தனது கணவரின் துணையுடன் களம் இறங்கியுள்ளார்.

பிரச்சாரம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஊராட்சிப் பகுதியில் அனைத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருவதாகவும், தான் வெற்றி பெற்றால் ராசாம்பாளையம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிக்காட்டுவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

தனது கணவரின் சிறு, சிறு சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தானும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகவும், இதற்கு தனது கணவரும், குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்து தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறும் சரண்யா, தான் வெற்றி பெற்றால் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஊராட்சியின் சார்பில் மக்களின் அவசர தேவைகளுக்கு கட்டணமில்லா கார் சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

வேட்பாளர் சரண்யா

தனது மனைவி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவராக விளங்குவதோடு சமூக அக்கறை கொண்டுள்ளார். அவருடைய முழு விருப்பத்தோடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனது மனைவி நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் ஊராட்சியின் வளர்ச்சிக்கு சரண்யாவுக்கு துணையாக இருப்பேன் என பாலசுப்பிரமணி உறுதியளிக்கிறார்.

வேட்பாளரின் கணவர் பாலசுப்ரமணி

தனது குறையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனதில் நம்பிக்கையோடு உள்ளாட்சித் தேர்தலில் களம் கானும் சரண்யா போன்ற பல மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளி உலகிற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவியானது பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வேட்பாளராக உள்ளார் அதே ஊராட்சியில் வசிக்கும் சரண்யா.

இவர் எல்லப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.

பார்வை திறன் இல்லாதவராண சரண்யா, தனது குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பிரச்சாரம்

இளங்கலை பட்டப்படிப்பு பயின்றுவரும் இவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கணவரின் சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவரும் சமூகத்திற்காக பணியாற்றவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தனது கணவரின் துணையுடன் களம் இறங்கியுள்ளார்.

பிரச்சாரம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஊராட்சிப் பகுதியில் அனைத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருவதாகவும், தான் வெற்றி பெற்றால் ராசாம்பாளையம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிக்காட்டுவதாகவும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

தனது கணவரின் சிறு, சிறு சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தானும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகவும், இதற்கு தனது கணவரும், குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்து தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறும் சரண்யா, தான் வெற்றி பெற்றால் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஊராட்சியின் சார்பில் மக்களின் அவசர தேவைகளுக்கு கட்டணமில்லா கார் சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

வேட்பாளர் சரண்யா

தனது மனைவி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவராக விளங்குவதோடு சமூக அக்கறை கொண்டுள்ளார். அவருடைய முழு விருப்பத்தோடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனது மனைவி நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் ஊராட்சியின் வளர்ச்சிக்கு சரண்யாவுக்கு துணையாக இருப்பேன் என பாலசுப்பிரமணி உறுதியளிக்கிறார்.

வேட்பாளரின் கணவர் பாலசுப்ரமணி

தனது குறையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மனதில் நம்பிக்கையோடு உள்ளாட்சித் தேர்தலில் களம் கானும் சரண்யா போன்ற பல மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளி உலகிற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Intro:வாய்ப்புக்கொடுங்கள்; மாற்றத்தை தருகிறோம்!! கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பார்வையற்ற பெண் பிரச்சாரம்


Body:நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவி பொது பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டாலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வேட்பாளராக உள்ளார் சரண்யா. அதே ஊராட்சியில் எல்லப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் லாரி உரிமையாளர் பாலசுப்பரமணியத்தின் மனைவி சரண்யா. 100 சதவீதம் பார்வை திறன் குறைந்தவரான சரண்யா தனது ஊனத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிடுகிறார். இளங்கலை பட்டபடிப்பு படித்து வரும் இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பரமணி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவரின் சமூக செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவரும் சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தனது கணவரின் துணையுடன் களம் இறங்கியுள்ளார். பார்வையற்ற மாற்று திறனாளியாக இருந்தாலும் ஊராட்சி பகுதியில் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருவதாகவும், தான் வெற்றி பெற்றால் ராசாம்பாளையம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி காட்டுவதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.


தனது கணவரின் சிறு, சிறு சமூக செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்ட தானும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்திட வேண்டும் என்ற நோக்கில் ஊராட்சி தேர்தலில் போட்டியிடுவதாகவும், இதற்கு தனது கணவரும், இரு குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்து தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், தான் வெற்றி பெற்றால் ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஊராட்சியின் சார்பில் மக்களின் அவசர தேவைகளுக்கு கட்டணமில்லா கார் சேவையை துவக்க உள்ளதாகவும், மக்களிடம் செல்லும் போது நல்ல வரவேற்பு உள்ளதாக கூறுகிறார் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பார்வையற்ற மாற்று திறனாளி சரண்யா.


தனது மனைவி பார்வையற்ற மாற்று திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவராக விளங்கி வருவதோடு சமூக அக்கறை கொண்டுள்ளதாகவும், அவருடைய முழு விருப்பத்தோடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், நிச்சயம் தனது மனைவி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், வெற்றி பெற்றால் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தனது மனைவிக்கு துணையாக இருப்பேன் என்கிறார் சரண்யாவின் கணவர் பாலசுப்பரமணி.


தனது ஊனத்தை பெரிதாக எடுத்து கொள்ளாமல் மனதில் ஏற்பட்ட நம்பிக்கையோடு உள்ளாட்சி தேர்தலில் களம் கானும்  சரண்யா போன்று இன்னும் பல மாற்று திறனாளிகள் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளி உல்கிற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


*ஈடிவி பார்த் செய்திகளுக்காக நாமக்கல்லிருந்து பரத்குமார்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.