ETV Bharat / state

பாதாளச் சாக்கடை, சாலை சீரமைப்பு வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 19, 2019, 10:45 PM IST

நாகை: மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடை, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Traders demonstration at Mayiladuthurai
Traders demonstration at Mayiladuthurai

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் முறையான பராமரிப்பு செய்யாததாலும் நகரம் முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி, பல்வேறு இடங்களில் உடைத்துக்கொண்டு, வாய்க்கால்கள், குளங்கள், காவிரி ஆற்றில் கலந்துவருகின்றது. இதன் காரணமாக மயிலாடுதுறை பிரதான சாலைகளில் 10 முறைக்கு மேல் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலைகள் உடைந்துவிடுவதால், உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் நிலத்தடி நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால், பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளளனர். இதனிடையே, கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள்

எனவே பாதாளச் சாக்கடை, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் வர்த்தகர்கள், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:

ஆள் இல்லாத வீடுகளில் Y, ஆள் இருக்கும் வீடுகளில் X...! - பட்டப்பகலிலேயே திட்டத்தை அரங்கேற்றும் கொள்ளையர்கள்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் முறையான பராமரிப்பு செய்யாததாலும் நகரம் முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி, பல்வேறு இடங்களில் உடைத்துக்கொண்டு, வாய்க்கால்கள், குளங்கள், காவிரி ஆற்றில் கலந்துவருகின்றது. இதன் காரணமாக மயிலாடுதுறை பிரதான சாலைகளில் 10 முறைக்கு மேல் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலைகள் உடைந்துவிடுவதால், உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் நிலத்தடி நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால், பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளளனர். இதனிடையே, கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள்

எனவே பாதாளச் சாக்கடை, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் வர்த்தகர்கள், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:

ஆள் இல்லாத வீடுகளில் Y, ஆள் இருக்கும் வீடுகளில் X...! - பட்டப்பகலிலேயே திட்டத்தை அரங்கேற்றும் கொள்ளையர்கள்!

Intro:மயிலாடுதுறையில் வீதிகள் தோறும் வழிந்தோடும் பாதாளசாக்கடை நீரால், தொற்றுநோய் பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், நகரம் முழுவதும் பாதாளசாக்கடை நீர் வழிந்தோடி வருகின்றது. 9இடங்களில் பாதாளசாக்கடை நீரை பம்பிங் செய்யும் இடங்கள் உள்ளது. இவற்றில் 2இடங்களில் மட்டுமே கழிவுநீரேற்று மோட்டார்கள் வேலை செய்கின்றன. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி, பல்வேறு இடங்களில் உடைத்துக்கொண்டு, வாய்க்கால்கள், குளங்கள் மற்றும்; காவிரி ஆற்றில் கலந்து வருகின்றது. மயிலாடுதுறையில் பிரதான சாலைகளில் 10முறைக்கு மேல் பாதாளசாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியுள்ளது. கனரக வாகனத்தில் செல்லும்போது, சாலைகள் உடைந்து விடுவதால், உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் நிலத்தடி மற்றும் நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால், பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளளனர். கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. பாதாளசாக்கடை மற்றும் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் வர்த்தகர்கள், மயிலாடுதுறை நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.