ETV Bharat / state

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை: போலி மருத்துவரின் கிளினிக்குக்கு சீல்!

நாகை: சித்த மருத்துவம் படித்துவிட்டு தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையளித்த பெண் மருத்துவரின் கிளினிக்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 8, 2019, 7:04 PM IST

nagapattinam fake doctor's clinic sealed by health department

நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் உள்ள ஆரோக்கிய அன்னை மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்தை ஆண்டனி ஜோஸப் ஜான்ஸன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும், சிறப்பு மருத்துவர் என்ற பெயரில் சித்த மருத்துவம் படித்த கீர்த்திகா என்பவர், இதே மருந்தகத்தில் கடந்த ஆறு மாத காலமாக கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து வந்த புகாரையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் மருத்துவர் குழுவினர் வேளாங்கன்னியில் உள்ள அந்த மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கீர்த்திகா, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததை குழுவினர் கண்டுபிடித்தனர். மேலும் ஆறு படுக்கைகள், ஈசிஜி கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் அம்மருந்தகத்தை சிறு மருத்துவமனைபோல செயல்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவரின் கிளினிக்

இதனையடுத்து, மருந்தகத்தில் செயல்பட்டு வந்த கிளினிக்குக்கு சுகாதாரத் துறை இணை இயக்குநர் இன்று சீல் வைத்தார். பின்னர், இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பதி வேளாங்கன்னி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!

நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் உள்ள ஆரோக்கிய அன்னை மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்தை ஆண்டனி ஜோஸப் ஜான்ஸன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும், சிறப்பு மருத்துவர் என்ற பெயரில் சித்த மருத்துவம் படித்த கீர்த்திகா என்பவர், இதே மருந்தகத்தில் கடந்த ஆறு மாத காலமாக கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து வந்த புகாரையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் மருத்துவர் குழுவினர் வேளாங்கன்னியில் உள்ள அந்த மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கீர்த்திகா, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததை குழுவினர் கண்டுபிடித்தனர். மேலும் ஆறு படுக்கைகள், ஈசிஜி கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் அம்மருந்தகத்தை சிறு மருத்துவமனைபோல செயல்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவரின் கிளினிக்

இதனையடுத்து, மருந்தகத்தில் செயல்பட்டு வந்த கிளினிக்குக்கு சுகாதாரத் துறை இணை இயக்குநர் இன்று சீல் வைத்தார். பின்னர், இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பதி வேளாங்கன்னி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!

Intro:சித்த மருத்துவம் படித்த பெண் மருத்துவர் அலோபதி மருத்துவம் பார்த்த கிளினிக்கிற்கு சீல் ; படுக்கை வசதி, இ.சி.ஜி போன்ற கருவிகளை கொண்டு மருத்துவமனை போல இயங்கி வந்தது அம்பலம் ; நாகை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நடவடிக்கை.
Body:சித்த மருத்துவம் படித்த பெண் மருத்துவர் அலோபதி மருத்துவம் பார்த்த கிளினிக்கிற்கு சீல் ; படுக்கை வசதி, இ.சி.ஜி போன்ற கருவிகளை கொண்டு மருத்துவமனை போல இயங்கி வந்தது அம்பலம் ; நாகை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நடவடிக்கை.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் ஆண்டனி ஜோஸப் ஜான்ஸன் என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இம் மருந்துக் கடையில் சிறப்பு மருத்துவர் என்ற பெயரில் சித்த மருத்துவம் படித்த கீர்த்திகா என்பவர் மருந்தகத்தில் வைத்து கடந்த 6 மாத காலமாக கிளினிக் நடத்தி அங்கு வரும் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து வந்த புகாரை அடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் மருத்துவர் குழுவினர் வேளாங்கண்ணியில் உள்ள அந்தமருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சித்த மருத்துவம் படித்த கீர்த்திகா நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் அம்மருந்தகம் 6 படுக்கைகள், இ.சி.ஜி கருவிகள், உள்ளிட்ட மருத்துவ உபகாரணங்கள் உடன், சிறு மருத்துவமனை போல செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மகேந்திரன் சீல் வைத்தார். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் அருண்பதி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.