ETV Bharat / state

நாகையில் 26 கிராம மக்கள் அனுசரித்த சுனாமி நினைவு நாள்! - நாகையில் சுனாமி நினைவு நாள்

நாகை: 26 மீனவ கிராம மக்கள் பேரணியாகச் சென்று சுனாமி நினைவுத் தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Nagai Tsunami memorial
Nagai Tsunami memorial
author img

By

Published : Dec 26, 2019, 1:15 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 6,065 பேர் உயிரிழக்கக் காரணமான சுனாமி, 2004ஆம் ஆண்டு காலை 8.35 மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இன்று 15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து மெளன ஊர்வலம் சென்றனர். தொடந்து சந்திரபாடி, பூம்புகார், சின்னமேடு, திருமுல்லைவாசல், தொடுவாய், வானகிரி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், தரங்கம்பாடி வட்ட மீனவ கிராம மக்கள், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சுனாமி நினைவு தினம் 2019

முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.

இதையும் படிங்க: நடுக்கடலில் கொண்டாடப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ்!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாவில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 6,065 பேர் உயிரிழக்கக் காரணமான சுனாமி, 2004ஆம் ஆண்டு காலை 8.35 மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இன்று 15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து மெளன ஊர்வலம் சென்றனர். தொடந்து சந்திரபாடி, பூம்புகார், சின்னமேடு, திருமுல்லைவாசல், தொடுவாய், வானகிரி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், தரங்கம்பாடி வட்ட மீனவ கிராம மக்கள், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சுனாமி நினைவு தினம் 2019

முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி இன்று காலை நடைபெற்றது.

இதையும் படிங்க: நடுக்கடலில் கொண்டாடப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ்!

Intro:சீர்காழி முதல் தரங்கம்பாடி15 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி 26 மீனவ கிராம மக்கள் பேரணியாக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பங்கேற்பு;-


Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் சீர்காழி தாலுகாவில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 26ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்று 15 ஆம்ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதியில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுனாமியில் உயிர் இழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தரங்கம்பாடி தாலுக்கா மீனவ கிராம மக்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ்,திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சந்திரபாடி, பூம்புகார், சின்னமேடு, திருமுல்லைவாசல், தொடுவாய், வானகிரி,புதுபட்டினம் உள்ளிட்ட 26 மீனவ கிராமத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் மீனவ கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.