ETV Bharat / state

மனைவியை கொன்ற கணவன் கைது

author img

By

Published : Apr 22, 2021, 2:40 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிப் படுகொலை செய்த கணவனை கைது செய்து பெரம்பூர் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

dfsa
dfsa

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அன்னவாசல் ஊராட்சி வாடகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மோகனாம்பாள்(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது.

பயிர் காப்பீட்டு தொகையை மனைவி மோகனாம்பாள் கேட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை பிரிந்து திருக்கடையூரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் வீரமணி வசித்து வந்துள்ளார். பிள்ளைகளுடன் வாடகுடியில் வசிக்கும் மோகனாம்பாள் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வாடகுடி பாலம் அருகே வேலைக்கு சென்றுவிட்டு நடந்து வந்துகொண்டிருந்த மோகனாம்பாளை வழிமறித்து அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு வீரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மோகனாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மோகனாம்பாள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வீரமணியை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அன்னவாசல் ஊராட்சி வாடகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மோகனாம்பாள்(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது.

பயிர் காப்பீட்டு தொகையை மனைவி மோகனாம்பாள் கேட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை பிரிந்து திருக்கடையூரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் வீரமணி வசித்து வந்துள்ளார். பிள்ளைகளுடன் வாடகுடியில் வசிக்கும் மோகனாம்பாள் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வாடகுடி பாலம் அருகே வேலைக்கு சென்றுவிட்டு நடந்து வந்துகொண்டிருந்த மோகனாம்பாளை வழிமறித்து அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு வீரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மோகனாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மோகனாம்பாள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வீரமணியை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.