ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை ? - போலீசார் விசாரணை!

author img

By

Published : Jun 20, 2021, 4:10 PM IST

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கொலை
இளைஞர் கொலை

மதுரை: பழங்காநத்தம் வி.கே.பி. நகர் அருகே இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரை எல்லீஸ் நகர், பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்த முகமது சையத் ஈசாக் என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சோகம்!

மதுரை: பழங்காநத்தம் வி.கே.பி. நகர் அருகே இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் முதல் கட்ட விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரை எல்லீஸ் நகர், பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்த முகமது சையத் ஈசாக் என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.