ETV Bharat / state

'ஜப்பான் கப்பலில் தவிக்கும் கணவரை மீட்டுத் தாருங்கள்' - ஆட்சியரிடம் மனு அளித்த மதுரைப்பெண் - petition to collector for Rescue my husband from japan ship by wife

மதுரை: கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து, தனது கணவரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்தார்.

Madurai
Madurai
author img

By

Published : Feb 13, 2020, 5:41 PM IST

ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். குறிப்பாக அங்கு இருக்கும் 162 இந்தியர்களில், 5 பேர் தமிழர்கள் ஆவர். அதில் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும், அக்கப்பலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களில் இருவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனது கணவரை உடனடியாக அங்கிருந்து, இந்திய அரசு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்யிடம் அன்பழகனின் மனைவி மல்லிகா இன்று மனு அளித்தார்.

'கப்பலில் தவிக்கும் எனது கணவரை மீட்டுத் தாருங்கள்'

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகா பேசுகையில்,"கொரோனோ வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால் இதுவரைக்கும் பாதிப்பில்லாத இந்தியர்களுக்கும் அந்த நோய் தொற்றியுள்ளது. மற்றவர்களுக்கு பரவும் முன்பாக, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும். என்னுடைய கணவரும் அந்தக் குழுவில் இருக்கின்ற காரணத்தால் அவரையும் உடனடியாக தமிழ்நாடு அழைத்து வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க அமைச்சர் வேலுமணி கோரிக்கை

ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். குறிப்பாக அங்கு இருக்கும் 162 இந்தியர்களில், 5 பேர் தமிழர்கள் ஆவர். அதில் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும், அக்கப்பலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களில் இருவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனது கணவரை உடனடியாக அங்கிருந்து, இந்திய அரசு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்யிடம் அன்பழகனின் மனைவி மல்லிகா இன்று மனு அளித்தார்.

'கப்பலில் தவிக்கும் எனது கணவரை மீட்டுத் தாருங்கள்'

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகா பேசுகையில்,"கொரோனோ வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால் இதுவரைக்கும் பாதிப்பில்லாத இந்தியர்களுக்கும் அந்த நோய் தொற்றியுள்ளது. மற்றவர்களுக்கு பரவும் முன்பாக, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும். என்னுடைய கணவரும் அந்தக் குழுவில் இருக்கின்ற காரணத்தால் அவரையும் உடனடியாக தமிழ்நாடு அழைத்து வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க அமைச்சர் வேலுமணி கோரிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.