ETV Bharat / state

பராமரிப்புப்பணிகள்... ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

author img

By

Published : Sep 14, 2022, 9:53 PM IST

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள்... ரயில் போக்குவரத்தில் மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள்... ரயில் போக்குவரத்தில் மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: மானாமதுரை முதல் மேலகொன்னகுளம், திண்டுக்கல் முதல் அம்பாத்துரை வரை, ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் வரை மற்றும் சூடியூர் முதல் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இதன்காரணமாக ராமேஸ்வரம் முதல் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமைகள் தவிர, ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை முதல் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்குப் பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

மேலும் திருச்சி முதல் மானாமதுரை முதல் திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, சிவகங்கை முதல் மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல் முதல் அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்புப்பணிகளால் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை, கோயம்புத்தூர் முதல் நாகர்கோவில் பகல் நேரம் விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை முதல் குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப்பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.

ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்குப் புறப்பட வேண்டிய மதுரை -செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக, ரத்து செய்யப்படும்.

குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக செப்டம்பர் 28, 29 ஆகிய இரு தினங்கள் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்தப் பணிக்காக, இந்த ரயில்கள் செப்டம்பர் 30அன்று மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பாலக்காடு செல்லும் ரயில் (16732) மதுரையிலிருந்து மாலை 06.30 மணிக்குப் புறப்படும்.

தென்காசி - செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (06665) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை விரைவு ரயில் (06657) ஆகியவை தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் மவுசு குறையாத மு.க.அழகிரி - ஆதரவாளரின் இல்லவிழாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு!

மதுரை: மானாமதுரை முதல் மேலகொன்னகுளம், திண்டுக்கல் முதல் அம்பாத்துரை வரை, ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் வரை மற்றும் சூடியூர் முதல் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இதன்காரணமாக ராமேஸ்வரம் முதல் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமைகள் தவிர, ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை முதல் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்குப் பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

மேலும் திருச்சி முதல் மானாமதுரை முதல் திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, சிவகங்கை முதல் மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல் முதல் அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்புப்பணிகளால் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை, கோயம்புத்தூர் முதல் நாகர்கோவில் பகல் நேரம் விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை முதல் குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப்பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.

ராஜபாளையம் முதல் சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்குப் புறப்பட வேண்டிய மதுரை -செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக, ரத்து செய்யப்படும்.

குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக செப்டம்பர் 28, 29 ஆகிய இரு தினங்கள் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்தப் பணிக்காக, இந்த ரயில்கள் செப்டம்பர் 30அன்று மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பாலக்காடு செல்லும் ரயில் (16732) மதுரையிலிருந்து மாலை 06.30 மணிக்குப் புறப்படும்.

தென்காசி - செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (06665) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை விரைவு ரயில் (06657) ஆகியவை தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் மவுசு குறையாத மு.க.அழகிரி - ஆதரவாளரின் இல்லவிழாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.