மதுரை: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த சுவாமிஜி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது மகன் விக்னேஷ், என்ஜினீயரிங் படித்து வந்தார். 2014ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அன்று பவுர்ணமியையொட்டி, அவர் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றார். அப்போது அங்கிருந்த விளம்பர பலகை திடீரென விக்னேஷ் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த எனது மகனை சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு இரும்புத்தூணை பிடித்ததில், மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவும் காரணம். எனவே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற யாத்திரை தலம். இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பரப்பலகை விழுந்ததால்தான் மனுதாரர் மகன் காயம் அடைந்தார்.