ETV Bharat / state

மெக்சிகோ நாட்டு பெண் கொலை: கணவரின் தண்டனை நிறுத்திவைப்பு!

மதுரை: பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்து எரித்த வழக்கில் மெக்சிகோவை சேர்ந்த மார்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jul 28, 2021, 1:45 PM IST

MDU
MDU

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (வயது 48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). இவர்களுக்கு அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தற்கு பின்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனையடுத்து மான்ட்ரிக் 2011ஆம் ஆண்டு தனது குழந்தையுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கி, ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அதன் பின் அவரது முன்னாள் மனைவி செசில்லா அகஸ்டா, நடனம் கற்பதற்காக கேரளாவுக்கு வந்தார்.

அங்கு தங்கி இருந்தவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கணவருடன் இருந்த குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். அப்போது மார்ட்டின், அகஸ்டாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் மார்ட்டின், அகஸ்டாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அதன் பின் அகஸ்டாவின் உடலை மார்ட்டின் காரில் கொண்டு வந்து மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் புதரில் எரித்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை மார்ட்டின் மீது கொலைவழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் மார்ட்டினுக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதி மன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மார்ட்டின் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இன்று (ஜூலை.28) இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமணம் முடிந்து பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்து எரித்த வழக்கில் மெக்சிகோவை சேர்ந்த மார்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மான்ட்ரிக் மன்சூருக்கு பிணை வழங்கி மாதம் தோறும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மெக்சிகோ நாட்டு பெண் கொலை - கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (வயது 48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). இவர்களுக்கு அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தற்கு பின்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனையடுத்து மான்ட்ரிக் 2011ஆம் ஆண்டு தனது குழந்தையுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கி, ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அதன் பின் அவரது முன்னாள் மனைவி செசில்லா அகஸ்டா, நடனம் கற்பதற்காக கேரளாவுக்கு வந்தார்.

அங்கு தங்கி இருந்தவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கணவருடன் இருந்த குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். அப்போது மார்ட்டின், அகஸ்டாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் மார்ட்டின், அகஸ்டாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அதன் பின் அகஸ்டாவின் உடலை மார்ட்டின் காரில் கொண்டு வந்து மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் புதரில் எரித்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை மார்ட்டின் மீது கொலைவழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் மார்ட்டினுக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதி மன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மார்ட்டின் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இன்று (ஜூலை.28) இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமணம் முடிந்து பிரிந்து வாழ்ந்த மனைவியை கொலை செய்து எரித்த வழக்கில் மெக்சிகோவை சேர்ந்த மார்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மான்ட்ரிக் மன்சூருக்கு பிணை வழங்கி மாதம் தோறும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மெக்சிகோ நாட்டு பெண் கொலை - கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.