ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: தந்தை, மகன் ஜாமின் மனு ஒத்திவைப்பு!

author img

By

Published : Nov 12, 2019, 7:58 PM IST

மதுரை: நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபடாத தங்களுக்கு வழக்கிலிருந்து முன்ஜாமின் வழங்கக் கோரிய சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் ஆகியோரின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவிட்டுள்ளது.

madurai high court

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கிலிருந்து முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘ரவிக்குமார் ஆகிய நான் ரசாயனக் கம்பெனியின் தலைவராக பொறுப்பிலிருக்கிறேன். எனது மகன் ரிஷிகாந்த் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்காகச் சேர்ந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து என்னையும் என் மகனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரங்களில் வீடுகளில் சோதனை செய்துவருகின்றனர்.

நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. நீட் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்தபோது அந்த சீட்டில் புகைப்பட மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அலுவர்களை அணுகியபோது, நுழைவுச் சீட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் என் மகன் மீதும் வழக்கப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கிலிருந்து எனக்கும் எனது மகனுக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காலிங் பெல் அடித்து வீட்டிற்குள் சென்ற பேரறிவாளன்!

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கிலிருந்து முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘ரவிக்குமார் ஆகிய நான் ரசாயனக் கம்பெனியின் தலைவராக பொறுப்பிலிருக்கிறேன். எனது மகன் ரிஷிகாந்த் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்காகச் சேர்ந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து என்னையும் என் மகனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரங்களில் வீடுகளில் சோதனை செய்துவருகின்றனர்.

நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. நீட் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்தபோது அந்த சீட்டில் புகைப்பட மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அலுவர்களை அணுகியபோது, நுழைவுச் சீட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் என் மகன் மீதும் வழக்கப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கிலிருந்து எனக்கும் எனது மகனுக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காலிங் பெல் அடித்து வீட்டிற்குள் சென்ற பேரறிவாளன்!

Intro:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..Body:நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..

சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிக்காந்த் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் என் மீதும் என் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அணுகுமாறு உத்தரவிட்டனர்.
நான் ரசாயன கம்பெனி ஒன்றின் தலைவராக பொறுப்பிலிருக்கும் நிலையில், எனது மகன் தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயில்வதற்கான சேர்ந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த போது அந்த புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது இது தொடர்பாக அதிகாரிகள் அணுகிய போது ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் எனது மகன் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆகவே, இந்த வழக்கில் எனக்கும் எனது முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் ..

இந்த வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது, இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.