ETV Bharat / state

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்!

தமிழ்நாட்டின் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சங்கத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 15, 2021, 6:07 AM IST

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்
சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்

மதுரை: அனை்த்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "தொடர் சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களை கடந்து இன்று அர்ச்சகர் மாணவர்கள் 24 பேரை ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான ஆகஸ்ட்,14ஆம் தேதியில், முதலமைச்சர் ஸ்டாலின், ‘மயிலைக் கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பேர் உள்பட 24 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் தடை கோரலாம்


உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு, ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நியமனத்தோடு தொடர்புடையவை. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க வழக்க மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்க வெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணுகலாம்.

எங்கள் மாணவர்கள் சிலருக்கு எதிர்ப்பு என நாடகம் நடத்தலாம். இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கடந்த காலத்தில் நாமெல்லாம் கோயில் சென்று சாமி கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள் இவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறக்க வேண்டும்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாக பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வயது வரம்பைத் தளர்த்தி பணி நியமனம் தமிழ்நாடு அரசு படிப்படியாக வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது போல் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். அடுத்த நியமனங்கள் மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதன் உள்ளிட்ட பெருங் கோயில்களில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

மதுரை: அனை்த்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "தொடர் சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களை கடந்து இன்று அர்ச்சகர் மாணவர்கள் 24 பேரை ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான ஆகஸ்ட்,14ஆம் தேதியில், முதலமைச்சர் ஸ்டாலின், ‘மயிலைக் கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பேர் உள்பட 24 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் தடை கோரலாம்


உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு, ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நியமனத்தோடு தொடர்புடையவை. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க வழக்க மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்க வெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணுகலாம்.

எங்கள் மாணவர்கள் சிலருக்கு எதிர்ப்பு என நாடகம் நடத்தலாம். இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கடந்த காலத்தில் நாமெல்லாம் கோயில் சென்று சாமி கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள் இவர்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை திறக்க வேண்டும்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாக பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வயது வரம்பைத் தளர்த்தி பணி நியமனம் தமிழ்நாடு அரசு படிப்படியாக வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது போல் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். அடுத்த நியமனங்கள் மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதன் உள்ளிட்ட பெருங் கோயில்களில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.