ETV Bharat / state

மதுரையில் 36 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்...!

மதுரை: தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று மதுரையில் 36 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

author img

By

Published : Mar 27, 2019, 7:28 AM IST

மதுரை

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேட்புமனுவைத் தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 26) கடைசி தேதி என்பதால் வேட்பாளர்கள் தீவிரமாகத் தங்களது தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி, மதுரையில் 36 வேட்பாளர்கள் ஆண்கள் 29, பெண்கள் 6, திருநங்கை 1 என வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் அலுவலர் நடராஜனிடம் அதிமுக, சி.பி.எம், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தமாக 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அதிமுக சார்பில் ராஜ்சத்யனும், சி.பி.எம் சார்பில் சு.வெங்கடேசனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டேவிட் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் ஆகிய 4 வேட்பாளர்கள் தலா 2 வேட்புமனுக்களும், மற்ற வேட்பாளர்கள் தலா ஒரு வேட்புமனு என்ற கணக்கில் 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 29 ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேட்புமனுவைத் தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 26) கடைசி தேதி என்பதால் வேட்பாளர்கள் தீவிரமாகத் தங்களது தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி, மதுரையில் 36 வேட்பாளர்கள் ஆண்கள் 29, பெண்கள் 6, திருநங்கை 1 என வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் அலுவலர் நடராஜனிடம் அதிமுக, சி.பி.எம், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தமாக 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அதிமுக சார்பில் ராஜ்சத்யனும், சி.பி.எம் சார்பில் சு.வெங்கடேசனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டேவிட் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் ஆகிய 4 வேட்பாளர்கள் தலா 2 வேட்புமனுக்களும், மற்ற வேட்பாளர்கள் தலா ஒரு வேட்புமனு என்ற கணக்கில் 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 29 ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
26.03.2019




தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள்.

40 வேட்பு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதில் 36 வேட்பாளர்கள் , ஆண்கள் 29, பெண்கள் 6, திருநங்கை 1 என வேட்பாளர்கள் மதுரையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட அதிமுக, சி.பி.எம், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார், 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அதிமுக சார்பில் ராஜ்சத்யனும், சி.பி.எம் சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டேவிட் அண்ணாத்துரையும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் ஆகிய 4 வேட்பாளர்கள் தலா 2 வேட்புமனுகளும், மற்ற வேட்பாளர்கள் தலா 1 வேட்புமனு என 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர், வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெற உள்ளது, வேட்புமனுக்களை வாபஸ் பெற 29 ஆம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் காலகெடு கொடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.