ETV Bharat / state

பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கரூர்: பழனி பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

author img

By

Published : Jan 23, 2021, 3:56 PM IST

விபத்து
road accident

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். வழக்கம்போல இந்தாண்டும் பாத யாத்திரையாக மோகனூர் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 6 மணிக்கு பழனிக்கு புறப்பட்டனர்.

யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றொரு வாகனத்தில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்துள்ளனர். கரூர் காக்காவாடி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி அருகே அந்த வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி பக்தர்களுக்கு பிஸ்கெட்கள் வழங்கியுள்ளனர். அப்போது ஓசூரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று பக்தர்களின் வாகனமான வேன் மீது பின்புறமாக மோதியது.

இந்த விபத்தில் மோகனூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்துராஜா தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்!

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். வழக்கம்போல இந்தாண்டும் பாத யாத்திரையாக மோகனூர் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 6 மணிக்கு பழனிக்கு புறப்பட்டனர்.

யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றொரு வாகனத்தில் உணவுப் பொருட்கள் ஏற்றி வந்துள்ளனர். கரூர் காக்காவாடி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி அருகே அந்த வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி பக்தர்களுக்கு பிஸ்கெட்கள் வழங்கியுள்ளனர். அப்போது ஓசூரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று பக்தர்களின் வாகனமான வேன் மீது பின்புறமாக மோதியது.

இந்த விபத்தில் மோகனூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்துராஜா தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன்(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.