ETV Bharat / state

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்! - மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
author img

By

Published : Feb 10, 2021, 3:11 PM IST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாத உதவித் தொகையை 5 ஆயிரமாக உயர்த்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.