ETV Bharat / state

குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்!

author img

By

Published : Feb 10, 2021, 3:11 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாத உதவித் தொகையை 5 ஆயிரமாக உயர்த்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாத உதவித் தொகையை 5 ஆயிரமாக உயர்த்திட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.