ETV Bharat / state

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் சிக்கல்: மோதல் உருவாகும் சூழல் - Context between the bilateral bilateral conflict

கன்னியாகுமரி: பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பில் உள்ளனர்.

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் பிரச்னை
தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் பிரச்னை
author img

By

Published : Feb 4, 2020, 1:38 PM IST

குமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் ஒரு சமுதாய மக்கள் அதிகமாகவும், மற்றொரு சமுதாய மக்கள் குறைவாகவும் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் 2008ஆம் ஆண்டின்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைவுவாயில் கட்டுவதில் இவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது.

அப்போது, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் கலவரமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் கட்டுப்படுத்தினர். தேவாலய நுழைவு வாயில் கட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தேவாலயம் நுழைவாயில் கட்டுவதற்கு சாதகமாகத் தீர்ப்புகள் வந்தன.

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் பிரச்னை

இதனைத் தொடர்ந்து இன்று காலை பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டும் பணிகள் தொடங்கின. இதற்கிடையில் ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிரடி படை காவலர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?

குமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் ஒரு சமுதாய மக்கள் அதிகமாகவும், மற்றொரு சமுதாய மக்கள் குறைவாகவும் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் 2008ஆம் ஆண்டின்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைவுவாயில் கட்டுவதில் இவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது.

அப்போது, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் கலவரமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் கட்டுப்படுத்தினர். தேவாலய நுழைவு வாயில் கட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தேவாலயம் நுழைவாயில் கட்டுவதற்கு சாதகமாகத் தீர்ப்புகள் வந்தன.

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் பிரச்னை

இதனைத் தொடர்ந்து இன்று காலை பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டும் பணிகள் தொடங்கின. இதற்கிடையில் ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிரடி படை காவலர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல் ஏற்படும் சூழல். போலீசார், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது.

Body:குமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் ஒரு சமுதாய மக்கள் அதிகமாகவும் அதனை தொடர்ந்து மற்றொரு சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டின் போது கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைவுவாயில் கட்டுவதில் இருதரப்பினர் இடையே மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது.

இதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. இதை தொடர்ந்து அப்போது போலீசார் தடியடி நடத்தி இந்த கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தேவாலய நுழைவு வாயில் கட்டுவது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேவாலயம் நுழைவாயில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தன.

இதனை தொடர்ந்து இன்று காலை பிள்ளையார்புரம் பகுதியில் தேவாலய நுழைவுவாயில் கட்டும் பணிகள் தொடங்க இருந்தன. இதற்கிடையில் அந்த வந்த ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியது.

இதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள் மற்றும் போலீசார், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, " நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் தற்போது இங்கு தேவாலய நுழைவுவாயில் கட்ட கூடாது என ஒரு தரப்பினர் " கூறிவருகின்றனர்.

ஆனால், நீதிமன்ற உத்தரவு இருப்பதால் நுழைவு வாயில் கட்ட வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.