ETV Bharat / state

வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவன் மாயம் - தீயணைப்புத்துறையினர் சிறுவனைத் தேடும் பணியில் தீவிரம்

கன்னியாகுமரி : ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பள்ளி மாணவன் வாய்க்காலில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனான். இதனையடுத்து காவல், தீயணைப்புத்துறையினர் சிறுவனைத் தேடிவருகின்றனர்.

வாய்க்காலில் குளிக்கும்போது மாயமான பள்ளி மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்
author img

By

Published : Oct 9, 2019, 8:14 AM IST

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் பாலகிருஷ்ணன் என்பவர் மகன் சந்தோஷ் (12) அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்றுபண்டிகை விடுமுறை என்பதால் சந்தோஷ், அவனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றி வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றான்.
சந்தோஷ் நண்பர்களுடன் தண்ணீரில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் ஆழமான பகுதிக்குச் சென்று மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவனது நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

வாய்க்காலில் குளிக்கும்போது மாயமான பள்ளி மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல், தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சந்தோஷ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி’ நாயகியின் ரீ-என்ட்ரி

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் பாலகிருஷ்ணன் என்பவர் மகன் சந்தோஷ் (12) அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்றுபண்டிகை விடுமுறை என்பதால் சந்தோஷ், அவனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றி வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றான்.
சந்தோஷ் நண்பர்களுடன் தண்ணீரில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் ஆழமான பகுதிக்குச் சென்று மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவனது நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

வாய்க்காலில் குளிக்கும்போது மாயமான பள்ளி மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல், தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சந்தோஷ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி’ நாயகியின் ரீ-என்ட்ரி

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் வாய்க்காலில் குளிக்கும்போது மாயம். தீயணைப்புத்துறையினர் சிறுவனைத் தேடி வருகின்றனர்.

Body:குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த பழவிளை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது இந்த முகாமில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (12). அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் இன்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றி வாய்க்கால் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர்.
சந்தோஷ் நண்பர்களுடன் தண்ணீரில் ஜாலியாக குளித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் ஆழமான பகுதிக்கு வந்து விட்டார்.
பின்னர் அங்கிருந்து மீண்டு வர முடியவில்லை. அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கிய சந்தோஷ் மீண்டும் திருப்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடம் அந்த ராஜாக்கமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாய்க்கால் பகுதிக்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் வாய்க்காலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சந்தோஷ் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.