ETV Bharat / state

கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மீது குவியும் புகார்கள்...!

author img

By

Published : Oct 29, 2020, 1:23 PM IST

கன்னியாகுமரி: மருத்துவர் தற்கொலை வழக்கை தொடர்ந்து, இளைஞர் தற்கொலை வழக்கை முறையாக நடத்த விடாமல் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தடுப்பதாக, அவர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மீது குவியும் புகார்கள்!
கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மீது குவியும் புகார்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள். மருத்துவராக பணியாற்றிய இவருக்கு, கன்னியாகுமரி காவல் துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனது மரணத்திற்கு காரணம் டிஎஸ்பி பாஸ்கரன் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். மேலும் இது தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் இறந்த மருத்துவர் சிவராம பெருமாள் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டிஎஸ்பி பாஸ்கரன் மீது குமரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினால், இதற்கு உண்மையான தீர்வு கிடைக்காது என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் மருந்துவாழ் மலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்களுக்கு சாதகமாக டிஎஸ்பி பாஸ்கரன் செயல்பட்டு வருவதாக, இறந்தவரின் தாய், சகோதரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், “எனது மகன் சுபாஷ் ஆனந்த் கடந்த மாதம் 23ஆம் தேதி மருந்துவாழ் மலைப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால் எனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனது மகன் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அன்று ராதாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் அவரது கணவரிடமும் பல மணி நேரம் போனில் பேசியுள்ளார்.

அந்த குடும்பத்திற்கும் எங்களுக்கும் முன்விரோதம் இருக்கிறது. எனவே அவர்கள் தான் எனது மகனுக்கு விஷத்தை ஊற்றி கொலை செய்து இருக்க வேண்டும். இது குறித்து டிஎஸ்பி பாஸ்கரனிடம் புகார் தெரிவித்தபோது, அவர் எனது மகளை மிரட்டினார். மேலும் நாங்கள் கூறியது குறித்து அவர் கண்டுகொள்ளவே இல்லை. எனது மகன் இறந்து இவ்வளவு நாட்களாகியும் உடற்கூறாய்வு அறிக்கை கிடைக்கவில்லை. எனது மகன் கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்காமல் டிஎஸ்பி பாஸ்கரன் தடுத்து வருகிறார். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள். மருத்துவராக பணியாற்றிய இவருக்கு, கன்னியாகுமரி காவல் துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனது மரணத்திற்கு காரணம் டிஎஸ்பி பாஸ்கரன் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். மேலும் இது தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் இறந்த மருத்துவர் சிவராம பெருமாள் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டிஎஸ்பி பாஸ்கரன் மீது குமரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினால், இதற்கு உண்மையான தீர்வு கிடைக்காது என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் மருந்துவாழ் மலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்களுக்கு சாதகமாக டிஎஸ்பி பாஸ்கரன் செயல்பட்டு வருவதாக, இறந்தவரின் தாய், சகோதரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், “எனது மகன் சுபாஷ் ஆனந்த் கடந்த மாதம் 23ஆம் தேதி மருந்துவாழ் மலைப்பகுதியில் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால் எனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனது மகன் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அன்று ராதாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் அவரது கணவரிடமும் பல மணி நேரம் போனில் பேசியுள்ளார்.

அந்த குடும்பத்திற்கும் எங்களுக்கும் முன்விரோதம் இருக்கிறது. எனவே அவர்கள் தான் எனது மகனுக்கு விஷத்தை ஊற்றி கொலை செய்து இருக்க வேண்டும். இது குறித்து டிஎஸ்பி பாஸ்கரனிடம் புகார் தெரிவித்தபோது, அவர் எனது மகளை மிரட்டினார். மேலும் நாங்கள் கூறியது குறித்து அவர் கண்டுகொள்ளவே இல்லை. எனது மகன் இறந்து இவ்வளவு நாட்களாகியும் உடற்கூறாய்வு அறிக்கை கிடைக்கவில்லை. எனது மகன் கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்காமல் டிஎஸ்பி பாஸ்கரன் தடுத்து வருகிறார். எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.