ETV Bharat / state

குமரியில் நேரு யுவகேந்திரா சார்பில் 15 நாட்கள் பயிற்சி முகாம்! - நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குனர் எம்.என். நட்ராஜ் பேச்சு

கன்னியாகுமரி: தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெறும் இளைஞர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் துவங்கியது.

மாநிலங்களவை எம்பி விஜயகுமார் பேச்சு
author img

By

Published : Sep 29, 2019, 2:47 PM IST

மத்திய அரசின் இளைஞர் நல விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெறும் முகாமின் துவக்க விழா

இந்த முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார், "இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து குமரி முதல் காஷ்மீர் வரையில் நற்பணிகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கன்னியாகுமரி கடற்கரையை உலகத்தரத்தில் மேம்படுத்த பிரதமரிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.

பின்னர் பேசிய நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் எம்.என். நட்ராஜ், "நேரு யுவகேந்திரா சார்பில் மலையேற்றம், பாறையேற்றம், அக்குவா ஸ்போர்ட்ஸ், ரிப்லிங், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திராவின் 30 ஆயிரம் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

ஜெஎன்யூ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலாளி

மத்திய அரசின் இளைஞர் நல விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெறும் முகாமின் துவக்க விழா

இந்த முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார், "இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து குமரி முதல் காஷ்மீர் வரையில் நற்பணிகள் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கன்னியாகுமரி கடற்கரையை உலகத்தரத்தில் மேம்படுத்த பிரதமரிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார்.

பின்னர் பேசிய நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் எம்.என். நட்ராஜ், "நேரு யுவகேந்திரா சார்பில் மலையேற்றம், பாறையேற்றம், அக்குவா ஸ்போர்ட்ஸ், ரிப்லிங், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திராவின் 30 ஆயிரம் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

ஜெஎன்யூ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற காவலாளி

Intro:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் துவங்கியது.


Body:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பயிற்சி முகாம் இன்று கன்னியாகுமரியில் துவங்கியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர்களான 15 நாட்கள் பணி முன் பயிற்சி முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமை ராஜ்யசபா எம்பி விஜயகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குனர் எம்.என். நட்ராஜ் நெல்லை ,மதுரை, தூத்துக்குடி ,தேனி ஆகிய மாவட்டத்தின் நேரு யுவகேந்திரா வின் உதவி இயக்குனர் செந்தில்குமார் நிர்வாகிகள் தினேஷ்குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர் .கன்னியாகுமரியில் 15 நாட்கள் முகாமில் திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தேசிய இளையோர் தொண்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள் .விழாவில் விஜயகுமார் எம்பி பேசியதாவது :-
நாட்டின் இளையோர்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை பணி செய்வதற்கு பயிற்சி அளித்து பக்குவப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசின் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய சக்தியாகும். நேரு யுவகேந்திரா சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று நாட்டுக்கு பல ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இலவச வீடு, கேஸ் இணைப்பு போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அரசியல்வாதிகளுக்கு மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல நேரு யுவகேந்திரா இளைஞர்கள் உதவி புரிய வேண்டும். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உலகத்தரத்தில் கடற்கரையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கியுள்ளேன். இவற்றைச் செயல்படுத்த பிரதமர் அனுமதி அளித்தால் கன்னியாகுமரி மாவட்டம் மேலும் வளர்ச்சியடையும் இவற்றை பிரதமரால் மட்டுமே நிறைவேற்ற முடியும். கோடை காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் மண் அள்ளுவதற்கு எந்த ஒரு கெடுபிடியும் இல்லாமல் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலையில் மண்ணை பெற்று விவசாயிகள் பயன் அடைந்தனர். இதனால் அதிகளவிலான எண்ணிக்கையில் குளங்கள் தூர் வாரப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு வருகின்றன .இதற்கென பல கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உள்ளேன். இதுபோன்ற திட்டங்களால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக உயர்ந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார் .தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேரு யுவகேந்திரா வின் மாநில இயக்குனர் எம்.என். நட்ராஜ் பேசியதாவது:- மத்திய அரசின் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா நாட்டின் கலாச்சார பெருமையை இளையவர்கள் அறிந்துகொள்ளும் கொள்ளவும் இளைஞர்களிடம் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இளைஞர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுடன் இணைந்து விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் விடுதிகள் குறைந்த கட்டணத்தில் நல்ல வசதிகளுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் .நாடு முழுவதும் மொத்தம் 87 இளைஞர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரியில் ஒரு இளைஞர் விடுதி அமைக்கப்பட உள்ளன. அதற்கான இடம் தேர்வு தேர்வு உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கும். நேரு யுவகேந்திரா சார்பில் சாகசச் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டு வருகிறது .இதில் ட்ரக்கிங்,பாறையேற்றம் பயிற்சி, அக்குவா ஸ்போர்ட்ஸ், ரிப்லிங், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .சேலம், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கரூர், புதுச்சேரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது .இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா வின் 30 ஆயிரம் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ரூபாய் 15 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ஒரு மன்றம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் பெறமுடியும். மதுரை, திருச்சி, தஞ்சை, காரைக்கால் ,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இளைஞர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது .இவ்வாறு பேசினார் முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20 இளைஞர் மன்றங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.