ETV Bharat / state

அத்தி வரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார்!

காஞ்சிபுரம்: நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை ரஜினிகாந்த் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.

author img

By

Published : Aug 14, 2019, 7:29 AM IST

Super Star Rajnikanth


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மக்கள் குவிகின்றனர். குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி இன்றுடன் 44 நாட்கள் ஆகிறது. இந்த மாதம் 17ஆம் தேதியன்று அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கவுள்ளனர். இன்னும் 4 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அத்தி வரதரை தரிசிக்க திடீரென சென்றனர்.

அத்தி வரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அத்தி வரதரின் புகைப்படம் அளிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடத்தில் அத்தி வரதரை தரிசித்துவிட்டு தன் மனைவி, ரசிகர்மன்ற பிரமுகர்கள் ஆகியோருடன் ரஜினிகாந்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு ஐஜி சாரங்கன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி .கண்ணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மக்கள் குவிகின்றனர். குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி இன்றுடன் 44 நாட்கள் ஆகிறது. இந்த மாதம் 17ஆம் தேதியன்று அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கவுள்ளனர். இன்னும் 4 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அத்தி வரதரை தரிசிக்க திடீரென சென்றனர்.

அத்தி வரதரை தரிசித்த சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அத்தி வரதரின் புகைப்படம் அளிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடத்தில் அத்தி வரதரை தரிசித்துவிட்டு தன் மனைவி, ரசிகர்மன்ற பிரமுகர்கள் ஆகியோருடன் ரஜினிகாந்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு ஐஜி சாரங்கன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி .கண்ணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் பிரசித்திபெற்றகோவிலில் ஒன்றான வரதராஜ பெருமாளின் 45 வது நாள்அத்தி வரதர் இன்று நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை பிரபல நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களுடன் நள்ளிரவில் தரிசனம்

Body:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநில மக்கள் சாரை சாரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி இன்றுடன் 44 நாட்கள் ஆகிறது.இன்று சுமார் 3.75 வட்சம் லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்தனர் .17.ம் தேதி வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதர் அன்று மாலை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட உள்ளார்.
இன்னும் 4 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் மாற்றம் லதா ரஜினிகாந்த் ஆகியோர் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் அத்தி வரதரை தரிசிக்க திடீரென வந்தனர் .விவிஐபி நுழைவாயில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சரவணன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியவர்கள் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை சென்று தரிசித்தனர் .நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அத்தி வரதரின் புகைப்படம் அளிக்கப்பட்டது .சுமார் 20 நிமிடத்தில் அத்தி வரதரை தரிசித்துவிட்டு தன் மனைவி மற்றும் ரசிகர் மன்ற பிரமுகர்களுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார் .Conclusion:இவர் வருகையை முன்னிட்டு ஐஜி சாரங்கன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி .கண்ணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.