ETV Bharat / state

அத்திவரதர் வைபவம் முடிந்த பின்னும் அலைமோதும் கூட்டம்

author img

By

Published : Oct 24, 2019, 6:27 AM IST

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவம் நிறைவடைந்த பின்பும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர்.

அத்தி வரதர் வைபவம் முடிந்த பின்னும் அலைமோதும் கூட்டம்

காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் என 48 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில்

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டது. அப்போது தரிசனம் பெறாத பக்தர்கள் தற்போது அனந்தசரஸ் குளத்தை பார்த்தபடி அத்திவரதரை வணங்கி வருகின்றனர்.

தினம்தோறும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அனந்தசரஸ் குளத்திலுள்ள அத்திவரதரை குளத்தின் வெளியே இருந்து பார்த்து தரிசித்த பின், மூலவர் தேவராஜனை தரிசித்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் குளத்தின் உள்ளே செல்லாதபடி காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் மட்டுமே குளம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

நவராத்திரி விழாவில் அங்கம் வகித்த அத்திவரதர்!

காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் என 48 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில்

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டது. அப்போது தரிசனம் பெறாத பக்தர்கள் தற்போது அனந்தசரஸ் குளத்தை பார்த்தபடி அத்திவரதரை வணங்கி வருகின்றனர்.

தினம்தோறும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அனந்தசரஸ் குளத்திலுள்ள அத்திவரதரை குளத்தின் வெளியே இருந்து பார்த்து தரிசித்த பின், மூலவர் தேவராஜனை தரிசித்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் குளத்தின் உள்ளே செல்லாதபடி காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் மட்டுமே குளம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

நவராத்திரி விழாவில் அங்கம் வகித்த அத்திவரதர்!

Intro:40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் நிறைவடைந்து அனந்தசரஸ் குளத்தில் வைத்து பின்பும் பக்தர்கள் குளத்தை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்கின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்


Body:40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு விமரிசையாக நடைபெற்றது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் என 48 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரத்து500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் உள்ளே வைக்கப்பட்டது. அத்தி வரதரை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தினமும் பக்தர்கள் வந்திருந்தனர். லட்சக்கணக்கான கூட்டத்தில் காண முடியாதவர்கள் தற்போது அனந்தசரஸ் குளத்தில் பார்த்தபடி தரிசனம் செய்து வருகின்றனர்.


தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் தேவராஜன் சாமி தடை செய்வதற்கு முன்பு அந்த சிரசு குளத்திலுள்ள அத்திவரதரை குலத்தின் வெளியே இருந்து பார்த்து தரிசித்து பின் மூலவரை தரிசித்து வருகின்றனர். வரும் பக்தர்கள் யாரேனும் குளத்தில் உள்ளே செல்லாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Conclusion:உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆனந்தபுரத்தில் குளத்தில் கோவிலின் உள்ளே உள்ள பொற்றாமரை குளத்தின் தண்ணீரை ஆனந்த சரஸ் குளத்தில் மாற்றக் கூடாது எனவும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குளத்தை எழுப்ப வேண்டும் என உத்தரவின்படி தற்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சிறுக சிறுக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளத்தில் விடப்படுகிறது. தற்போது பெய்த மழை மற்றும் சுத்திகரிப்பு தண்ணீரால் குளத்தின் அடியில் இருந்து இரண்டு படிக்கட்டு மட்டுமே நிரம்பி உள்ளது. தொடர் மழை பெய்தால் மட்டுமே குளம் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.