ETV Bharat / state

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - காஞ்சிபுரம் ஆர்டிஓ எச்சரிக்கை

author img

By

Published : Dec 13, 2020, 2:26 PM IST

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் 500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் காவல் துறை மூலம் நகைகள் கைப்பற்றப்படும் எனக் கிராம மக்களுக்கு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

uthiramerur
uthiramerur

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 500 ஆண்டுகால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளும்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெற்றன.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் நேற்று (டிச. 12) இரவு கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - ஆர்டிஓ எச்சரிக்கை
மேலும் கோயிலில் கிடைக்கபெற்ற தங்கத்தினை அரசுக்கு தர முடியாது எனக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நகைகளை காவல் உதவியோடு மீட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுகுமார் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் இன்று (டிச. 13) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் வருவாய்த் துறையினர் காவலர்கள் உதவியுடன் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிடைத்த நகைகளை மீட்பதற்காக சென்றபோது, அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். இதன்பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் காவல் துறை மூலம் நகைகள் கைப்பற்றப்படும் என வருவாய் கோட்டாட்சியர், கிராம மக்களிடம் எச்சரிக்கைவிடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 500 ஆண்டுகால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளும்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெற்றன.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் நேற்று (டிச. 12) இரவு கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில் நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - ஆர்டிஓ எச்சரிக்கை
மேலும் கோயிலில் கிடைக்கபெற்ற தங்கத்தினை அரசுக்கு தர முடியாது எனக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நகைகளை காவல் உதவியோடு மீட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுகுமார் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் இன்று (டிச. 13) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் வருவாய்த் துறையினர் காவலர்கள் உதவியுடன் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிடைத்த நகைகளை மீட்பதற்காக சென்றபோது, அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். இதன்பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் காவல் துறை மூலம் நகைகள் கைப்பற்றப்படும் என வருவாய் கோட்டாட்சியர், கிராம மக்களிடம் எச்சரிக்கைவிடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க: நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.