ETV Bharat / state

செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு  தனி மாவட்டம்: ஆலோசனைக் கூட்டம்!

author img

By

Published : Aug 21, 2019, 4:50 PM IST

காஞ்சிபுரம்: செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு  தனி மாவட்டமாக உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா


காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டை தனியாக பிரித்து, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனி மாவட்டமாகும் செங்கல்பட்டு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சத்யகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், திமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளையும் 500க்கும் மேற்பட்ட மனுக்களையும் வழங்கினர்.

மேலும், 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பித்த அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் கூடிய விரைவில் அதற்கான பணிகள் ஆலோசித்து நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.


காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டை தனியாக பிரித்து, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனி மாவட்டமாகும் செங்கல்பட்டு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சத்யகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், திமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளையும் 500க்கும் மேற்பட்ட மனுக்களையும் வழங்கினர்.

மேலும், 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பித்த அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் கூடிய விரைவில் அதற்கான பணிகள் ஆலோசித்து நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் என்று செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களது தலைமையில் சிறப்பு விருந்தினராக முனைவர் சத்யகோபால் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.


Body:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இன்று காஞ்சிபுரத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் இன்று செங்கல்பட்டு தனி மாவட்டமாக கொண்டு வருவதற்கு என்னென்ன தேவை என்பதை அதற்கு இந்த அந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்பதையும் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டமாக நடைபெற்றது .
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை ஏற்று முனைவர் சத்யகோபால் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி க்கள், மற்றும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.பி கள், அதிக அளவில் கலந்து கொண்டு மாவட்டத்தில் ஏதுவாக வழிமுறைகளை ஆலோசிக்கும் வண்ணமாக உரையாடினர்.
அதனை அடுத்து காஞ்சிபுரத்தை திருவிழாக்கோலம் ஆகிய 48 நாள் தொடர்ந்து சிறப்பித்த அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கருத்து கேட்பு கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .


Conclusion:இதனை அடுத்து அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கூடிய விரைவில் அதற்கான பணிகளை ஆலோசித்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.