ETV Bharat / state

அத்தி வரதர் தரிசனம் - இறுதி நாளில் குறைந்த பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்தின் இறுதி நாளான இன்று பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

author img

By

Published : Aug 16, 2019, 3:07 PM IST

Aththivarathar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்ற அத்தி வரதர் வைபவ தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று இரண்டு மணியுடன் விஐபி, விவிஐபி தரிசனம் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஆடி கருட சேவையை தொடர்ந்து அதிகரித்து வந்த பக்தர்கள் கூட்டம், கடைசி நாளான இன்று அதிகளவில் வருகை தருவாவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகை குறைந்துள்ளது.

ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி தரும் ஸ்ரீ அத்தி வரதர்

தரிசனத்தின் கடைசி நாளான இன்று ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து காட்சி அளிக்கும் அத்தி வரதரை கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் பத்கர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நாளை மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் சிலை வைக்கபடும். இதற்கு பிறகு 40ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் அத்திவரத்தரை தரிசிக்க முடியும்.

குறிப்பாக 47நாட்கள் நடந்த இந்த தரிசன வைபவத்தில் சுமார் 1கோடியே 04 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற்ற அத்தி வரதர் வைபவ தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று இரண்டு மணியுடன் விஐபி, விவிஐபி தரிசனம் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஆடி கருட சேவையை தொடர்ந்து அதிகரித்து வந்த பக்தர்கள் கூட்டம், கடைசி நாளான இன்று அதிகளவில் வருகை தருவாவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகை குறைந்துள்ளது.

ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி தரும் ஸ்ரீ அத்தி வரதர்

தரிசனத்தின் கடைசி நாளான இன்று ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து காட்சி அளிக்கும் அத்தி வரதரை கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் பத்கர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நாளை மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் சிலை வைக்கபடும். இதற்கு பிறகு 40ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் அத்திவரத்தரை தரிசிக்க முடியும்.

குறிப்பாக 47நாட்கள் நடந்த இந்த தரிசன வைபவத்தில் சுமார் 1கோடியே 04 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Intro:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 47 ஆம் நாள், ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

Body:
விஐபி தரிசனம் நேற்று 2 மணியுடன் நிறைவுபெற்று வரிசையில் இருப்பவர்களுக்கு 5 மணிவரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.


ஆடி கருட சேவை நேற்று இரவு 8 மணிக்கு முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் விஐபி மற்றும் பொது தரிசனம் அதிகாலை 4 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்


இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்த்து பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 3 மணி நேரமாவது காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இனி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் பக்தர்களுக்கு காட்சி தருவார். நாளை மாலை அல்லது இரவு அனந்தசரஸ் குலத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரத்தரை வைக்கபடுவர்.




நேற்று ஆடி கருடன் சேவை நடைபெறுவதால் மாலை 4 மணி முதல் 8 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டு 8 மணிக்கு மேல் பொது தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.



இன்று நிறைவு நாள் என்பதால் அதிகாலை 5 மணி முதல் பொது தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பக்தர்கள் வருவதை பொருத்து இரவு முழுவதும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



Conclusion:நேற்று 46 நாளான அதிகாலை 4 மணி வரை பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



கடந்த 46 நாட்களில் 1கோடியே 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.